வெள்ளி, 10 ஜூன், 2011

கலித்தொகை பதிப்பு வரலாறு (1887 - 2010)

      காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக முனைவர் பட்டத் தமிழ் ஆய்வாளர் மு.முனீஸ்மூர்த்தி எழுதிய கலித்தொகைப் பதிப்பு வரலாறு என்ற நூலைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. காவ்யா வெளியிட்டிருக்கும் நூல்களில் நன்னூல் வரிசையில் மற்றொரு நூல். 224 பக்கங்கள். விலை ரூ.170.00.
        தற்போது திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகப் பெரியார் உயராய்வு மையத்தின் தலைவராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் முனைவர் இரா. அறவேந்தன் அவர்களின் வழிகாட்டலில் முனைவர் பட்ட ஆய்வு செய்துவரும் முனீஸ்மூர்த்தி பழகுதற்கு இனியவர்; நற்பண்புகள் பல செறிந்தவர்; பிறரின் உளமறிந்து உதவும் தன்மையர்; அறவேந்த ஆளுமையை இவரிடம் பலநிலைகளிலும் நாம் காணலாம். அறிவிலும்; ஆராய்ச்சியிலும் இவர் ஆழங்காற்படுவார் என்பதற்கும், முனைவர் அறவேந்தன் அவர்களின் மாணவர் இவர்  என்பதற்கும் இந்நூல் ஒரு சான்று.
    அறிவுவயப்பட்ட ஆய்வு என்பதே இன்றைய தேவை. உணர்வுவயப்பட்ட ஆய்வு எந்த நன்மையையும் தராது. இளம் ஆய்வாளர்களுக்குப் பல்வேறு திறன்கள் இருந்தாலும் அவற்றை நல்லறிவு வழியில் முறைப்படுத்தி வெளியிடும்போதுதான் தமிழும் தமிழ்ச்சமூகமும் நன்மை பெறமுடியும். இனிவரும் காலம் தமிழுக்கு நற்காலம் என்பது இந்நூலால் நாம் அறியும் உண்மையாகும். இந்த உண்மையை உணர்ந்துகொள்ள விரும்புவோர் கலித்தொகைப் பதிப்பு வரலாறு என்ற இந்நூலை வாங்கிப் படிக்கலாம்.

 நூலின் முன்பக்கம்
 நூலின் பின்பக்கம்

செவ்வாய், 7 ஜூன், 2011

மணிமேகலைப் பயிலரங்கு

   புதுச்சேரி ஆரோவில் மரபு மையத்தின் சார்பில் மணிமேகலை மக்கள் பயிலரங்கு 27.03. 2011 அன்று நடைபெற்றது. பேராசிரியர்கள்  முனைவர் சேதுபதி அவர்களும், முனைவர் குறிஞ்சிவேந்தன் அவர்களும்  ஆரோவில் மரபு மையத்தின்பொறுப்பாளர் கவிஞர் மீனாட்சி அவர்களுடன் இணைந்து அப்பயிலரங்கை நடத்தினர். அப்பயிலரங்கில் மணிமேகலைப் பதிப்பு வரலாறும் பதிக வரலாறும் என்ற தலைப்பில் நான் உரையாற்றினேன். அன்று பிற்பகலில் நடைபெற்ற நிறைவுவிழாவில் பேராசிரியர் முனைவர் சிவ. மாதவன் அவர்கள் கலந்துகொண்டு பயிலரங்க நிறைவுரையாற்றினார். பயிலரங்கக் காட்சிகள் இவை:



திங்கள், 6 ஜூன், 2011

தொல்காப்பியர் விருது

      இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் 42 ஆம் கருத்தரங்கம் மதுரை காமராசர் பல்கலைக் கழகத் தமிழியற்புலத்தில் கடந்த மேத் திங்கள் 21, 22 ஆம் நாட்களில் நடைபெற்றது. கடந்த 2000ஆம் ஆண்டுமுதல் இக்கருத்தரங்குகளில் தொடர்ந்து எழுதுவதை நான் வழக்கமாகக் கொண்டுள்ளேன். இவ்வாண்டும்  குறுந்தொகைச் சுவடிகளும் சுவடிப் பதிப்புக்களும் என்ற பொருண்மையில் ஆய்வுரை எழுதியுள்ளேன்.  இந்திய அளவிலான கருத்தரங்காகிய இதில், கடந்த ஆண்டு  நான் எழுதிய  தொல்காப்பியக் கருத்தியல் புலப்பாட்டுநெறிகள்  என்ற தலைப்பிலான கட்டுரைக்குத் தொல்காப்பியர் விருதுப் போட்டிக்கான பரிசு அக்கருத்தரங்கில் வழங்கப்பட்டது. கருத்தரங்கக் காட்சிகள் இவை.

 
 மதுரை காமராசர் பல்கலைக் கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் திரு. 'அக்ரி'. கணேசன் அவர்கள் தொல்காப்பியர் விருதுப் போட்டிக்கான சான்றிதழை வழங்கிச் சிறப்பிக்கின்றார். உடன் பேராசிரியர் இரா.மோகன் அவர்கள்.
 மதுரை காமராசர் பல்கலைக் கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் அவர்கள், தமிழின் சிரிப்பு நூலுக்காக முனைவர் இ.கி.இராமசாமி அவர்களுக்குச் சிறப்புச் செய்கின்றார்.
மதுரை காமராசர் பல்கலைக் கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் திரு. 'அக்ரி'. கணேசன் அவர்கள், செம்மொழித் தமிழ் ஆய்வுரைகள் நூலுக்காக சிறப்புச் செய்கின்றார்.

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...