புதன், 21 நவம்பர், 2012

பல்துறை நோக்கில் தொல்காப்பியம் - கருத்தரங்கு 31.01.2013 – 01.02.2013


புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறை
புதுச்சேரி பிரெஞ்சு நிறுவன இந்தியவியல் துறையுடன்
இணைந்து
பல்கலைக் கழக நிதிநல்கைக் குழு உதவியுடன் நடத்தும்
பல்துறை நோக்கில் தொல்காப்பியம் - கருத்தரங்கு
31.01.2013 – 01.02.2013
அறிவிப்பு & அழைப்பு மடல்
தமிழன்புடையீர்,
வணக்கம். புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறை, புதுச்சேரி பிரெஞ்சு நிறுவன இந்தியவியல் துறையுடன்இணைந்து பல்கலைக் கழக நிதிநல்கைக் குழுவின் நிதியுதவியுடன் இருநாள் கருத்தரங்கு ஒன்றை 31.01.13 – 01.02.13 ஆம் நாட்களில் நடத்த வுள்ளது.
            அக்கருத்தரங்கிற்குத் தொல்காப்பியத்தைப் பல்துறை நோக்குகளில் அணுகி விளக்கம் செய்யும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. மொழியியல் நோக்கில் தொல்காப்பியம், உளவியல் நோக்கில் தொல்காப்பியம், அறிவியல் நோக்கில் தொல்காப்பியம், பயிரியல் நோக்கில்  தொல்காப்பியம், உயிரியல் நோக்கில் தொல்காப்பியம் என்றினைய தலைப்புக்களிலோ, ஒரு துறையுடன் நுணுக்கமாக அணுகும் வகைகளிலோ கட்டுரைகள் அமையலாம்.

·                                  கட்டுரைகள் ஏ4 அளவுத் தாளில் 5 பக்கங்களுக்கு மிகாமல் அமையலாம்.

·         தமிழ் யுனிகோடு எழுத்துரு வில் தட்டச்சிட்டு வன்படியாகவும் (அச்சிட்ட தாள் வடிவிலும்), மென்படியாகவும் (குறுந்தட்டில் பதிந்தோ, மின்னஞ்சல் வழியாகவோ) அனுப்ப வேண்டும்.
·         
               பேராளர்ப் பதிவுக்கட்டணம் ரூ. 300-க்கான வரைவோலையை முனைவர் சி. பத்மாசனி    (s. padmasani, Puducherry)) என்ற பெயருக்கு எடுத்துப் புதுச்சேரியில் மாற்றத்தக்கதாக அனுப்பவேண்டும். பதிவுப் படிவம், வரைவோலை அனுப்ப கடைசிநாள் : 26.12.12.

·                     கட்டுரைகள் கருத்தரங்க நாளன்று ஐ.எசு.பி.என். எண் ணுடன் கருத்தரங்கத் தொகுதி களாக வெளியிடப்பெறும். பேராளர்களுக்கு நண்பகல் உணவும், தங்குமிடமும் சான்றிதழும் வழங்கப்பெறும்.

·                              தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரையாளர்களுக்குப் பயணப்படி வழங்கப்பெறும்.

·                              கட்டுரையும் வரைவோலையும் அனுப்பக் கடைசி நாள் : 05.01.13.

·                             கட்டுரை, வரைவோலை அனுப்பவேண்டிய முகவரி:

                              முனைவர் ஆ. மணி,
                     கருத்தரங்க ஒருங்கிணைப்பு இணைச்செயலர்,
                     மனை எண் 56, நான்காம் குறுக்குத் தெரு,
                     அமைதி நகர்,
                     அய்யங்குட்டிப் பாளையம்,
                      புதுச்சேரி – 605 009,
                      பேசி: 94439 27141, 78716 29365,
                     மின்னஞ்சல் : manikurunthogai@gmail.com

                               கருத்தரங்க அழைப்பு மடல் - 1

  கருத்தரங்க அழைப்பு மடல் - 2



ஞாயிறு, 11 நவம்பர், 2012

தவறான மின்னஞ்சல்கள்

அன்புடையீர்,


       வணக்கம். நான் முன்னொரு காலத்தில் பயன்படுத்திய  manikuruthogai@yahoo.co.in என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து தவறான பல செய்திகள் நண்பர்களுக்கு அனுப்படுவதாக அறிந்தேன். அந்தக் கணக்கைத் தடை செய்ய முயன்றும் முடியவில்லை. பாஸ்வேர்ட் மாற்றப்பட்டுள்ளது. எனவே அந்த மின்னஞ்சல் முகவரியிலிருந்து ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் அதை நீக்கிவிடுக. பார்க்கவேண்டாம். எனக் கேட்டுக் கொள்கின்றேன். என்னால் ஏற்பட்ட இந்த தொல்லைக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...