புதன், 4 செப்டம்பர், 2013

முனைவர் ஆ. மணிக்குக் குடியரசுத் தலைவரின் இளந்தமிழறிஞர் விருது

      புதுச்சேரித் தாகூர் கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் . மணி அவர்களுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கும் இளந்தமிழறிஞர் விருது வழங்கப்படவுள்ளது. புதுதில்லியில்  நடைபெற உள்ள விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சி இவ்விருதினை வழங்கவுள்ளார்.  தமிழ் நாளிதழ்களில் அது பற்றி வெளியான செய்திகளின் படப்படிகள் இதோ.

தினத்தந்தி நாளிதழ்ச் செய்தி (04.09.13, ப. 2)

தமிழ் முரசு மாலை இதழ்ச் செய்தி (04.09.13, ப. 2)





குடியரசுத்தலைவர் விருதுகள் அறிவிப்பு

     செம்மொழி இலக்கண, இலக்கியங்களில் ஆய்வு நிகழ்த்தி வருவோரை  ஊக்கப்படுத்தும் வகையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆண்டுதோறும் விருதுகளை  வழங்கி வருகின்றது. அவ்வகையில் அண்மையில் 2009 -10, 2010 – 11 ஆம் ஆண்டுகளுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டன.  தமிழ் நாளிதழ்களில் அது பற்றி வெளியான செய்திகளின் காட்சி இதோ.

தினத்தந்தி நாளிதழ்ச் செய்தி (03.09.2013, ப. 3)


தினமணி நாளிதழ்ச் செய்தி (04.09.2013, ப. 9)

தினகரன் நாளிதழ்ச் செய்தி (04.09.2013, ப. 4)

தினமலர் நாளிதழ்ச் செய்தி (04.09.2013, ப. 2)

புதன், 7 ஆகஸ்ட், 2013

சுதா மேனிலைப் பள்ளி வெள்ளிவிழா

    புதுச்சேரி மாநிலம், திருக்கனூரில் அஞ்சலையம்மாள் அறக்கட்டளை என்ற பெயரில் ஓர் அறக்கட்டளை நிறுவி, பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களின் கல்வி வளத்தைப் பெருக்கும் வகையில் சுதா மேனிலைப் பள்ளி, உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரி ஆகியவற்றைத் தொடக்கித் திறம்பட நடத்தி வருகின்றார் கல்வியாளர் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள். அவருடைய நற்சிந்தனைகளால் வளர்ந்து வரும் சுதா மேனிலைப் பள்ளியின் இருபத்து ஐந்தாம் ஆண்டு விழா வெள்ளிவிழாவாகக் கடந்த 30.03.2013 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. கல்வியாளர் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள் தலைமையில் நடந்த அவ்விழாவில் புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்கள் முனைவர் ஆ. மணி அவர்களும், முனைவர் கு. ஞானகுரு அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். அவ்விழாவின் படத்தொகுப்பு இங்கு. பணி மிகுதியால் இப்போதுதான் இதனைப் பதிவிட முடிந்தது. நன்றி. 

வரவேற்புரை : திரு இராஜகோபால் அவர்கள்,  (முதல்வர், சுதா மேனிலைப் பள்ளி)

விழா அரங்கின் தோற்றம்
ஆண்டறிக்கை வாசித்தல்.

முனைவர் ஆ. மணி அவர்களுக்குச் சிறப்புச் செய்கின்றார் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள்


முனைவர் கு. ஞானகுரு அவர்களுக்குச் சிறப்புச் செய்கின்றார் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள்

தமக்குப் பயிற்றுவித்த ஆசிரியருக்குச் சிறப்புச் செய்கின்றார் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள்
தமக்குப் பயிற்றுவித்த ஆசிரியருக்குச் சிறப்புச் செய்கின்றார் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள்

தமக்குப் பயிற்றுவித்த ஆசிரியருக்குச் சிறப்புச் செய்கின்றார் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள்

கல்வியாளர் ம. பச்சையப்பன் அவர்களின் படத்திறப்பு விழா.
முனைவர் ம. இலட்சுமணன் அவர்களின் தலைமையுரை

முனைவர் ஆ. மணி அவர்களின் சிறப்புரை 
முனைவர் கு. ஞானகுரு அவர்களின் வாழ்த்துரை
விழாவில் பங்கேற்றோர்

போட்டிகளில் வெற்றி பெற்றோருக்குப் பரிசு, சான்றிதழ் வழங்கல்

தாகூர் கலைக்கல்லூரியில் இதழியல், மக்கள் தகவலியல் - சான்றிதழ்ப் பாடத் தொடக்கவிழா

        தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறை தொடங்கப்பட்டு ஏறத்தாழ 53 ஆண்டுகள் ஆகின்றன. அத்துறையில் இதுவரை இல்லாத நிகழ்வாக; புதியதொரு வரலாறாக; முதன்முறையாகப் பல்கலைக் கழக நிதிநல்கைக் குழுவின் உதவியுடன் இதழியல், மக்கள் தகவலியல் - சான்றிதழ்ப் பாடம் இக்கல்வியாண்டு முதல் தொடக்கப்பட உள்ளது. அதன் தொடக்கவிழா இன்று (07.08.2013 புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு நிகழவுள்ளது. தமிழன்பர்கள் பங்கு கொள்ள வேண்டுகின்றேன். அழைப்பு மடல் இத்துடன் இணைக்க ப்பட்டுள்ளது.

 அழைப்பிதழ் பக்கம் -1
அழைப்பிதழ் பக்கம் -2

செவ்வாய், 7 மே, 2013

தாகூர் கலைக்கல்லூரி - தொல்காப்பியத் தேசியக் கருத்தரங்கு

புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறையும் புதுச்சேரி, பிரெஞ்சு ஆய்வு நிறுவன இந்தியவியல் துறையும் இனைந்து நடத்திய பல்துறை நோக்கில் தொல்காப்பியம் என்ற இருநாள் நாடளாவிய கருத்தரங்கின் படத்தொகுப்பு இவண் தரப்படுகின்றது. இக்கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளராக முனைவர் ஆ. மணி செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. புகழ்பெற்ற அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற இக்கருத்தரங்கு தாகூர் கலைக்கல்லூரியின் வரலாற்றில் நூல் வெளியீட்டுடன் கூடிய முதல் கருத்தரங்க நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

அரங்கப் பதாகை

மாணவியர் கைவண்ணம்
முனைவர் ஆ. மணியின் அறிமுக உரை
முனைவர் தெ. ஞானசுந்தரம் ஐயா அவர்கள் குத்துவிளக்கேற்றிக் கருத்தரங்கைத் தொடக்குதல்

புறப் பதாகை
கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு. இராசன் அவர்களின் தலைமையுரை.
பேரளர்ப் பதிவில் பேராசிரியரும் மாணவியரும்
அறிஞர் தெ. ஞானசுந்தரம் ஐயா அவர்களின் சிறப்புரை.
முனைவர் ந. தெய்வசுந்தரம் அவர்களின் உரை
புது தில்லி, ஜவர்கர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் சந்திரசேகரன் அவர்களின் உரை.
பார்வையாளர்கள்
இணை அமர்வுகளில் கட்டுரைகள்
முனைவர் சிலம்பு செல்வராசு அவர்களின் உரை

பேராசிரியர் கு. சிவமணி அவர்களின் உரை
பார்வையாளர் பகுதியில் முனைவர் மாதையன், முனைவர் அறவேந்தன், முனைவர் சம்பத் ஆகியோர்

முனைவர் இரா. கோதண்டராமன் அவர்களின் உரை

முனைவர் ப. மருதநாயகம் அவர்களின் உரை
தமிழ்த்துறைத் தலைவரின் அறிஞர் அறிமுக உரை. மேடையில் முனைவர் இரா. அரவேந்தன், முனைவர் பெ. மாதையன் ஆகியோர்.

முனைவர் சிவ. மாதவன் அவர்களின் உரை
மாணவர் கருத்துரை
நிறைவு விழாவில் பங்கேற்ற முனைவர் இராமசாமி அவர்களுக்கு கல்லூரிப் பொறுப்பு முதல்வர் ஜெயச்சந்திரன் அவர்கள் நினைவுப் பரிசு வழங்கல்
பிரெஞ்சு ஆய்வு நிறுவன இந்தியவியல் துறையின் தலைவர் முனைவர் சுப்பராயலு அவர்களுக்குத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பத்மாசனி அவர்கள் நினைவுப் பரிசு வழங்குதல்
பேராசிரியர் முனைவர் க. இராமசாமி அவர்களின் நிறைவுப் பேருரை.
முனைவர் சுப்பராயலு அவர்களின் வாழ்த்துரை



சனி, 27 ஏப்ரல், 2013

தமிழ் இலக்கிய வினாடி - வினா 2011

  • கடந்த 2011இல் தாகூர் கலைக்கல்லூரியில் மாணவர்களுக்காக முனைவர் ஆ. மணி நடத்திய தமிழ் இலக்கிய வினாடி வினா - 2011 நிகழ்ச்சியின் படத் தொகுப்பு உங்கள் பார்வைக்குத் தரப்படுகின்றது.



வியாழன், 11 ஏப்ரல், 2013

முனைவர் ஆ. மணியின் ஆய்வுப் பொருண்மைகள் - 1


    தமிழில் நிகழும் ஆய்வுகள் பற்றிய கருத்துக்கள் உலகுக்கு உடனே வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து எனக்குண்டு. ஆனால் அது எளிமையான செலன்று என்பதை நம் பட்டறிவு நமக்கு உணர்த்துகின்றது. எனினும் ஒவ்வொருவரும் தாம் செய்து வரும்/ செய்துள்ள ஆய்வுகளைப் பற்றிய குறிப்புக்களை வழங்குவது அறிவுலகிற்குப் பயன்படும். அவ்வகையில் முனைவர் ஆ. மணி செய்துள்ள ஆய்வுப் பொருண்மைகள் பற்றிய குறிப்புக்கள் இவண் தரப்பட்டுள்ளன. பின்வரும் கருத்துக்களில் குறிப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வ.எண். ஆய்வுரைத்தலைப்பு. நிதியுதவிய நிறுவனம்/அரங்கு,/ தலைப்பு.   நிகழ்ந்த இடமும் நாளும்.

1.  தொல்காப்பியப் பாடவேறுபாடுகள் (எழுத்து, சொல்).
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடந்தப்பட்ட தொல்காப்பியம் (எழுத்து. , சொல்.) பயிலரங்கு,
தாகூர் கலைக் கல்லூரி, புதுச்சேரி, 04.11.2009.  

2.  திரிகடுகம் : 1950 இக்குப் பிற்பட்ட பதிப்புகளும் உரைகளும்.
நீதி இலக்கியம் பதிப்புகளும் வெளியீடுகளும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் & அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி,  2010.
தமிழ்த்துறை,      அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி,  03,04,05.02.2010.

3.  கானல்வரி.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடந்தப்பட்ட சிலப்பதிகாரப் பயிலரங்கு,               
கற்பகம் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர், 04.03.2010.

4.  தொல்காப்பிய - சங்க இலக்கிய அறத்தொடு நிற்றல் மரபுகள்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடந்தப்பட்ட ஒப்பீட்டு நோக்கில் தொல்காப்பிய இலக்கியவியல் கோட்பாடுகளும் சங்க இலக்கிய மரபுகளும்' பயிலரங்கு,     
தமிழ், கலை, அறிவியல் கல்லூரி, மயிலம், 28.12.2010.

5.  பாடல் ஒன்றால் வென்ற சேயிழையர்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடந்தப்பட்ட சங்க இலக்கியப் பெண்பால் புலவர்கள்' கருத்தரங்கு,
அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரி, வாலாசாப்பேட்டை, 30.12.2010.

6.  கலித்தொகை - இ.வை. அனந்தராமையர் பதிப்புநெறிகள்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடந்தப்பட்ட சங்க இலக்கியப் பதிப்புக்களும் சங்க இலக்கிய ஆய்வு வரலாறும்' பயிலரங்கு,   
அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம், 07.01.2011.

7.  இலக்கண இலக்கிய உரைகளில் திருக்குறள்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடந்தப்பட்ட திருக்குறளும் உரைகளும் ஆய்வுக்களங்கள் - பன்முகநோக்கு' பயிலரங்கு,      
சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை, 22.01.2011.

8.  குறுந்தொகை விழுமியங்கள்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றத்தால் நடந்தப்பட்ட சங்க இலக்கியங்கள் போற்றும் விழுமியங்கள்' பயிலரங்கு,     
இளைஞர் விடுதி, சோலைநகர், புதுச்சேரி, 14.02.2011.

9.  சங்க இலக்கியக் கைக்கிளை மரபுகள்.  
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடத்தப்பட்ட சங்க இலக்கியப் பயிலரங்கு,     
வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, மதுரை, 20.02.2011.

10.  உரையாசிரியர்கள் பார்வையில் சாரியைகள்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடத்தப்பட்ட செம்மொழி இலக்கணக் கோட்பாட்டிற்குஉரையாசிரியர்களின் பங்களிப்பு' பயிலரங்கு,
அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி, 21.02.2011

11.  பன்முகநோக்கில் குறுந்தொகை.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடத்தப்பட்ட சங்க இலக்கியப் பயிலரங்கு,  
சமால் முகம்மது கல்லூரி,  திருச்சி,  05.03.2011.

12.  உரையாசிரியர்களின் அகப்பொருள் பற்றிய நோக்கு.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடத்தப்பட்ட செம்மொழி இலக்கணக் கோட்பாட்டிற்கு உரையாசிரியர்களின் பங்களிப்பு' பயிலரங்கு,        
மாநிலக் கல்லூரி, சென்னை, 07.12.2011.

13.  உரையாசிரியர்களின் இடைச்சொல் கோட்பாடு.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடத்தப்பட்ட செம்மொழி இலக்கணக் கோட்பாட்டிற்கு உரையாசிரியர்களின் பங்களிப்பு' பயிலரங்கு,  
மாநிலக் கல்லூரி, சென்னை, 07.12.2011.

14.  சங்க இலக்கியம்வழி அறியப்பெறும் குறுநிலமன்னர் வரலாறு.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடத்தப்பட்ட பயிலரங்கு,
அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி, காரைக்கால், 01.02.2012.

15.  தொல்காப்பிய முப்பொருள் கோட்பாடும் திணைக் கோட்பாடும்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடத்தப்பட்ட பயிலரங்கு,
புதுக் கல்லூரி, சென்னை, 02.02.2012.

16.  தொல்காப்பியப் பேராசிரியர் உரை பவானந்தர் பதிப்பு.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடத்தப்பட்ட கருத்தரங்கு,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம், 16.02.2012.

17.  தொல்காப்பியப் புணரியலும் குறுந்தொகையும்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடத்தப்பட்ட கருத்தரங்கு,
கற்பகம் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர், 18.02.2012.

18.  சிலப்பதிகார விழுமியங்கள்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடத்தப்பட்ட பயிலரங்கு,
ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரி, மயிலம், 01.03.2012.

19.  குறுந்தொகையில் பகுத்தறிவுச் சிந்தனைகள்.
செவ்வியல் படைப்புக்களில் பகுத்தறிவுச் சிந்தனைகள், பதிப்புத்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி, 2012,ISBN: 978-81-922810-9-4.
பெரியார் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி, 03.03.2012.

20.  தொல்காப்பிய வனப்புக் கோட்பாடு – அழகு.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடத்தப்பட்ட கருத்தரங்கு,
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம், புதுச்சேரி, 11.03.2012.

21.  தொல்காப்பிய இடைச்சொல்லும் பிற்கால இலக்கணங்களும்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடத்தப்பட்ட பயிலரங்கு,
உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரி, திருக்கனூர், புதுச்சேரி, 14.12.12.

22.  தொல்காப்பிய அகப்பொருளும் உரையாசிரியர்களும்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடத்தப்பட்ட பயிலரங்கு,
உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரி, திருக்கனூர், புதுச்சேரி, 21.12.12.

23.  சிலப்பதிகாரக் கருத்தியல் : மீளாய்வு.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடத்தப்பட்ட பயிலரங்கு,
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வுநிறுவனம், புதுச்சேரி, 03.01.13.

24.  இளம்பூரணர் உரைநெறிகள்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் நடத்தப்பட்ட கருத்தரங்கு,    
அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம், 10.01.13.

சனி, 23 மார்ச், 2013

பதிற்றுப் பத்து : வைதேகி அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு

    சங்கப் பனுவல்களில் இரும்புக்கடலை என அழைக்கப்படும் நூல் பதிற்றுப் பத்து ஆகும். சங்கப் பனுவல்கள் அனைத்துமே செவ்விய, செறிந்த நடையுடையவை. அவற்றுள்ளும் பதிற்றுப் பத்து மிகக் கடுமையான நடையுடையது என்பதைக் குறிக்கவே பழந்தமிழர்களில் சிலர் அந்நூலை இரும்புக் கடலை எனக் குறித்தனர். கடலை என்பது உணவுப்பொருள்; எளிமையாக உண்ணத் தகுந்தது. அந்தக் கடலையே இரும்பினால் ஆனதாக இருந்தால் எப்படி உண்பது? எப்படி அது செரிமானமாகும்?. இலக்கியம் என்பது சுவைக்கத் தகுந்தது. அது கடுமையானதாக இருந்தால் அதனைச் சுவைப்பது எப்படி? என்ற கவலையே மேற்கண்ட மரபுத் தொடருக்குக் காரணம். அத்தகைய பதிற்றுப் பத்தையும் தன்னுடைய எளிமையான மொழிநடையால் சிறப்பாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்திருக்கின்றார் அமெரிக்க வாழ் தோழியரான திருமதி வைதேகி ஹெர்பர்ட் அவர்கள். அந்நூல் சென்னை, கொன்றை பதிப்பகத்தின் வழியாக வெளிவந்திருக்கின்றது. 

  பதிற்றுப் பத்தின் மொழிபெயர்ப்புப் பணிக்கு உலகப் பேரறிஞர் முனைவர்  ஜார்ஜ் எல். ஹார்ட்* அவர்கள் உதவியுள்ளார் என்பதும், டோக்கியோ பல்கலைக் கழகப் பேராசிரியர் தக்கனோபு தக்கசி அவர்கள் மதிப்புரை வழங்கியுள்ளார் என்பதும் இம்மொழிபெயர்ப்பின் உலகத் தரத்திற்குச் சான்றுகளாகும்.

     இந்திய மதிப்பில் ரூ. 300 விலையில் வந்துள்ள இந்நூல் நல்ல ”காலிகோ” என்ற கெட்டி அட்டைப் புத்தகக் கட்டுடனும், நல்ல தாளிலும் நேர்த்தியான அச்சுக்கோர்ப்பிலும் வெளிவந்திருப்பது பாராட்டுதலுக்குரியது. ஒருமைக் குறியில் அமைந்த இந்நூலின் அச்சாக்கத்தை அமைத்துத் தந்தவர் நண்பர், பேராசிரியர் இல. சுந்தரம் என்பதை அறியும்போது மகிழ்ச்சி பிறக்கின்றது.  மேலும் வைதேகி அவர்களுக்குச் சங்கத் தமிழைக் கற்றுக் கொடுத்த பேராசிரியர் ருக்மணி இராமச்சந்திரன் அவர்களே இந்நூலை வெளியிட்டதோடு பதிப்புரையும் எழுதியுள்ளார் என்பது தமிழ்ப் பேராசிரியர்கள் அறிய வேண்டிய செய்தியாகும். நல்லதொரு இலக்கியச் சுவைஞர்களின் கூட்டணியே இந்நூலின் சிறப்புக்குக் கட்டியம் கூறுவதாகும். 

          பதிற்றுப் பத்து என்பது சேரநாட்டை ஆண்ட உதியன், பொறையன் ஆகிய இரு அரச இனங்களின் சில நூற்றாண்டு வரலாற்றைக் கூறுகின்ற 100 பாடல்களின் தொகுப்பாகும். ஒவ்வொரு சேரனைப் பற்றியும் பத்துப் பாடல்களை ஒவ்வொரு புலவரும் பாடியுள்ளனர். முத்ற்பத்தும் இரண்டாம் பத்தும் கிட்டவில்லை. எஞ்சிய 80 பாடல்களும், பிற நூல் உரைகளின் மேற்கோள்களால் சில பாடல் துணுக்குகளும் கிடைத்துள்ளன. பதிற்றுப்பத்துக்கு பழைய உரை ஒன்று உண்டு. பதிற்றுப்பத்தினை அதன் பழைய உரையோடு முதற்கண் பதிப்பித்தவர் உ.வே. சாமிநாதையர் ஆவார். 1904 ஆம் ஆண்டு அப்பதிப்பு வெளிவந்தது. அதன் பின்னர் 1937 இலில் ந.சி. கந்தையா பிள்ளை எழுதிய பதிற்றுப் பத்து வசனம் வெளிவந்தது. 1950 இல் ஔவை. துரைசாமிப் பிள்ளையின் விளக்கவுரை வெளிவந்தது. யாழ்ப்பாணத்து அறிஞராகிய அருளம்பலவானரின் பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை பகுதிகளாக வெளிவந்து 1963இல் முழுமையடைந்தது. அதன்பின்னர்ப் பலரும் பதிற்றுப்பத்துக்கு உரையெழுதியுள்ளனர். மொழிபெயர்ப்புக்கள் சில நூலளவிலும் பாடலளவிலும் வந்துள்ளன. எனினும் வைதேகி அவர்களின் மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைகின்றது.  இத்தகைய சிறந்த ஒரு மொழிபெயர்ப்பினை வெளிக் கொணர்ந்ததற்காக பேராசிரியர்  முனைவர் ருக்மணி அவர்களுக்கும் தமிழ் நெஞ்சங்களின் சார்பாகப் பாராட்டுக்கள்.

     சங்க நூல்களைப் பதிப்பித்த உ.வே.சாமிநாதையருக்கும், சங்கப் பாடல்கள் பலவற்றை மொழிபெயர்த்துத் தமிழ் இலக்கியங்களின் பக்கம் உலகின் கவனத்தை ஈர்த்த ஏ.கே. இராமானுசம் அவர்களுக்கும் தம்முடைய பதிற்றுப் பத்து மொழிபெயர்ப்பைப் படையலாகியுள்ளதன் முலமே வைதேகி அவர்களின் தமிழுள்ளத்தை நாம் அறியலாம்.  படிப்புப் பக்கத்தினைத் தொடர்ந்து பேராசிரியர் ருக்மணி இராமச்சந்திரன் எழுதியுள்ள குறிப்பும், அதனைத் தொடர்ந்து வைதேகி அவர்கள் எழுதியுள்ள குறிப்பும் தப்பட்டுள்ளன. பொருளடக்கத்தினைத் தொடர்ந்து சங்க இலக்கியம் பற்றிய அறிமுகக் குறிப்புக்கள் 15 பக்க அளவில் தரப்பட்டுள்ளதன. சங்க இலக்கியங்களையும் அவற்றின் உரைகளையும்  அறிய விரும்புவோருக்கு இப்பகுதி பெரிதும் பயன் நல்கும் பான்மையது. மேலும் பதிற்றுப்பத்து அறிமுகம் ஒன்றும் 6 பக்க அளவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    பதிற்றுப் பத்தின் மொழிபெயர்ப்புப் பகுதியில் முதற்கண் பாடல் எண், பாடலின் பெயர், துறை, தூக்கு, வண்ணம் ஆகியன தரப்படுள்ளன. அதனைத் தொடர்ந்து சந்தி பிரித்த பாடம் தரப்பட்டுள்ளது. பாடலின் பின்னர் தலைப்புடன் கூடிய ஆங்கில மொழிபெயர்ப்பும், நிறைவாக தமிழ்ச்சொல்லும் அவற்றின் ஆங்கிலப் பொருளும் தரப்பட்டுள்ளன. பாடலின் சொற்கள் கிடந்தவாறே அவற்றின் ஆங்கிலப் பொருளும் தரப்படுள்ளது சிறப்புக்குரியதாகும். பாடலின் சொற்களுக்கான பொருளைக் கிடந்தவாறே அறிய விரும்புவோருக்கும், புதிதாக மொழிபெயர்ப்புச் செய்து பழக விரும்புவோருக்கும் பெரிதும் பயன் தருவதாக இப்பகுதி அமைந்துள்ளது. இருப்பினும் பயன்பாடு கருதி, தமிழ்ச்சொற்களின் அருகிலேயே பிறைக்குறியில்  தமிழ்ச்சொற்களுக்குரிய ஆங்கில எழுத்துப் பெயர்ப்பும் தருவது பொருத்தமுடையதாக இருக்கும். இனி வரும் பதிப்புக்களில் வைதேகி அவர்கள் இதனைச் செய்வார் என நம்பலாம்.

      தமிழ் இலக்கியங்களைக் கற்க விரும்பும் பிற மொழியினரும், தமிழர்களும் இந்நூலைப் பயன் கொள்வார்களாக. 

    நூலின் முன்னட்டை

 நூலின் பின்னட்டை

* குறிப்பு: உலகப் பேரறிஞர் முனைவர் ஜார்ஜ் எல்.  ஹார்ட் அவர்கள் என்னுடைய முனைவர்ப் பட்ட ஆய்வின் அயல்நாட்டுத் தேர்வாளராக இருந்தவர். குறுந்தொகை உரைநெறிகள் என்ற என்னுடைய நூலுக்குச் “ சங்க இலக்கிய ஆய்வுகளுக்கெல்லாம் வழிகாட்டும் ஆய்வு” என மதிப்புரை வழங்கியவர் என்பது கூடுதல் செய்தி.

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...