ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரிப் பட்டமளிப்பு விழா (04.01.14)

   புதுச்சேரி மாநிலம், திருக்கனூரில் இயங்கி வரும் உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரியின் எட்டாவது பட்டளிப்பு விழா கடந்த 04.01.14 சனிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் நடைபெற்றது. பட்டமளிப்பு விழாக்களைக் கண்டு கொள்ளாமல் மறந்தும் மறைத்தும் விடுகின்ற கல்லூரிகளுக்கிடையே ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழாவை நிகழ்த்தி வரும் உஷா இலட்சுமணன் கல்லூரி நிருவாகத்தினர் பாராட்டுதலுக்குரியவர்கள்.
     கல்வியாளரும் நற்சிந்தனையாளருமாகிய கல்லூரிச் செயலர் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அவ்விழாவில் அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளர் முனைவர் கணேசன் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு, பட்டங்களை வழங்கிச் பட்டமளிப்பு விழாப் பேருரை நிகழ்த்தினார்.
        கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் முனைவர் அர்ஜுனன் அவர்களும், விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மேனாள் பேராசிரியர் பி. தனஞ்செயன் அவர்களும், புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் ஆ. மணி அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரியின் வணிகவியல் பேராசிரியர் ஆர். திருமாவளவன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். விழா இனிதே நிறைவுற்றது. விழா ஏற்பாடுகளைக் கல்லூரியின் துணைமுதல்வர் பேராசிரியர் உஷா இலட்சுமணன் அவர்கள் தலைமையிலான ஆசிரியர்களும் மாணவர்களும் செய்திருந்தனர். கிடைத்துள்ள படங்கள் மட்டுமே இவண் தரப்பட்டுள்ளன.


அழைப்பிதழின் முதல் பக்கம்

அழைப்பிதழின் இரண்டாம் பக்கம்

 விழா மேடையில் சிறப்பு விருந்தினர்கள்
 சிறப்பு விருந்தினர் முனைவர் கணேசன் அவர்கள் விளக்கேற்றி வைத்தல்
 சிறப்பு விருந்தினர் முனைவர் ஆ. மணி அவர்கள் விளக்கேற்றி வைத்தல்
 கல்லூரிச் செயலர் முனைவர் மா. இலட்சுமணண் அவர்கள் விளக்கேற்றி வைத்தல்

 கல்லூரிச் செயலர் முனைவர் மா. இலட்சுமணண் அவர்கள்  தலைமையுரை ஆற்றுதல்
 முனைவர் கணேசன் அவர்கள் பட்டம் வழங்குதல்

 கல்லூரிச் செயலர் முனைவர் மா. இலட்சுமணன் அவர்கள் முனைவர் ஆ. மணி அவர்களுக்குச் சிறப்புச் செய்தல்
முனைவர் ஆ. மணி அவர்களின் வாழ்த்துரை





கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...