திங்கள், 27 டிசம்பர், 2010

நற்றிணை - பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1915) உரைப்பதிப்பு

      1862 செடம்பர் 10 ஆம் நாள் பிறந்த பின்னத்தூரார் நற்றிணைக்கு உரையெழுதி அச்சுக்குக் கொடுத்திருந்தார் அந்நூல் அச்சாகி வெளிவரும் முன்னரே 1914ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 30ஆம் நாள் இயற்கையெய்தினார். பாடினோர்பாடப்பட்டோர் வரலாறு ஆகியன அதற்குப் பின்னரே அச்சிடப்பட்டு நற்றிணை வெளிவந்தது. குறுந்தொகையைப்பொருத்தவரையில் உரையெழுதும் முயற்சியை அவர் மேற்கொள்ளவில்லை.நற்றிணை முழுமைக்கும் உரையெழுதிய பின்னத்தூரார் அகநானூற்றின் சில
பாடல்களுக்கு உரையெழுதியுள்ளார் என்பது வரலாறு காட்டும் உண்மையாகும்.

        நற்றிணைக்கு முதற்கண் திணைவகுத்துமுதன்முதலாக உரையெழுதிமுதற்பதிப்பாசியராகவும் விளங்கிய பின்னத்தூராரும் குறுந்தொகைக்கு முதற்கண் திணைவகுத்துமுதன்முதலாக உரையெழுதிமுதற்பதிப் பாசியராகவும் விளங்கிய தி.சௌ.அரங்கனாரும் சமகாலத்தவர் என்ற செய்தி இவண் நினையத்தக்கது.

      பின்னத்தூரார் உரையின் உரிமையைப் பெற்ற திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் அவ்வுரையை அவர் வெளியிட்டவாறே 1952 மார்ச்சில் கழக முதற்பதிப்பாக வெளியிட்டனர். அது 1956 ஆகச்டில் இரண்டாம் பதிப்பாகவும் வெளிவந்தது. 1962சனவரியில் கற்பார் எளிதாகப் புரிந்துகொள்ளும்பொருட்டுப் பொ.வே.சோமசுந்தரனாரைக் கொண்டு பொழிப்புரையைப் பதவுரையாக மாற்றியும்,  இலக்கணக் குறிப்புஆய்வுரை ஆகியவற்றை எழுதிச்சேர்த்தும் திருத்திய மூன்றாம் பதிப்பாக வெளியிட்டனர். அதன் தலைப்புப் பக்கம் வருமாறு:
                                                      

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...