குறுந்தொகை : நூலாராய்ச்சி (பகுதி - 4)
முல்லை
காடும் காட்டைச் சார்ந்த இடங்களும் முல்லையாகப் பகுக்கப் பட்டிருக்கின்றன. இந்நிலம் கார் காலத்தில் வளம் பெற்றுத் திகழும். இங்கே செம்மண் பரந்திருத்தலின் இந்நிலத்தைச் செம்புலமென்பர். இங்குள்ள ஊரைச் சீறூரென்று கூறுவர்.
இங்கே வாழ்பவர் இடையர். அவர்கள் ஆடுகளையும் பசுக்களையும் மேய்ப்பர். புனத்தையுழுது வரகு முதலியவற்றை விதைப்பர். மழையின் பொருட்டுத் தலையில் கவிழ்த்தற்குப் பறியோலையை வைத்திருப்பர். அவர்கள் இராக்காலத்தே ஆடுகளோடு மேய்ப்புலத்தே தங்கி விடுதலும் உண்டு. அவர்களுக்குப் பாற்சோறு உணவாகும்.
இந்நிலத்திற்குரிய முல்லை மலரைப் பற்றிய செய்திகள் பலபடியாகச் சொல்லப்படுகின்றன.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக