தொல்காப்பிய
அகத்திணை இயல்: உள்ளுறையின் இலக்கணம்
51.உள்ளுறுத்து இதனோடு
ஒத்துப்பொருள் முடிகென
உள்ளுறுத்து உரைப்பதே1
உள்ளுறை உவமம். (அகத். 51)
இஃது, உள்ளுறை உவமம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இதன்
பொருள்): உள்ளுறுத்து பொருள் இதனோடு ஒத்து முடிக என -
(உள்ளுறுத்தப்பட்ட கருப்பொருளை) உள்ளுறுத்துக் கருதிய பொருள் இதனோடு ஒத்து முடிக
என, உள்ளுறுத்து உரைப்பதே உள்ளுறை உவமம் - உள்ளுறுத்துக்
கூறுவதே உள்ளுறை உவமம்.
எனவே, உவமையாற் கொள்ளும் வினை பயன் மெய் உருவன்றிப்
பொருளுவமையாற் கொள்ளப்படுவது.
உதாரணம்:
"வெறிகொள்
இனச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக்
குறைபடுதேன் வேட்டுங் குறுகும் - நிறைமதுச்சேர்ந்து
உண்டாடுந் தன்முகத்தே செவ்வி
உடையதோர்
வண்தா மரைபிரிந்த வண்டு" (தண்டியலங்காரம்); ஒட்டணி
இது
வண்டோரனையர் மாந்தர்எனக் கூறுதலான் உவமிக்கப்படும் பொருள் புலப்படாமையின்
உள்ளுறையுவம மாயிற்று. இதனுட் காவியும் தாமரையும் கூறுதலான் மருதமாயிற்று. (அகத். 51).
குறிப்பு விளக்கம்
1.இறுவதை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக