ஆய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 மார்ச், 2025

இணைய ஆய்விதழ் இனம் - கட்டுரை (2025 பிப்ரவரி): திருக்குறளின் முதல் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பு The first complete English translation of the Thirukkural

 இணைய ஆய்விதழ் இனம் - கட்டுரை (2025 பிப்ரவரி): திருக்குறளின் முதல் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பு The first complete English translation of the Thirukkural

பன்னாட்டு இணைய ஆய்விதழாகிய இனம் 2025 பிப்ரவரி (மலர்: 10. இதழ்: 41) இதழில் திருக்குறளின் முதல் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பு The first complete English translation of the Thirukkural என்னும் கட்டுரை வெளியாகியுள்ளது. பதிப்பாசிரியர்களுக்கு நன்றி. கட்டுரையின் படப்படி, இணைப்பு இதோ:

                                                    








                                                       

                                                                 

   திருக்குறளின் முதல் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பு The first complete English translation of the Thirukkural | இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies)


https://drive.google.com/file/d/1FAMikEIbYWTZJf6Y1oIXgQL1UWj7d_Zy/view?usp=drive_link

சனி, 15 பிப்ரவரி, 2025

தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசு (2022)

 தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசு (2022)

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்கு 33 வகைப்பாடுகளில் பரிசுகளை வழங்கி வருகின்றது. அவற்றுள் சிறந்த நூலாசிரியருக்கும், சிறந்த பதிப்பகத்திற்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. சிரந்த நூலாசிரியர் பரிசுத்தொகை ரூ. 30000 ஆகும் சிறந்த பதிப்பகத்திற்கான பரிசுத்தொகை ரூ. 10000 ஆகும். கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான மொழி வளர்ச்சி, இலக்கணம்  என்னும் வகைப்பாட்டில் முனைவர் ஆ. மணி ஆராய்ந்து பதிப்பித்த “தொல்காப்பியம் பொருண்மை நோக்குப் பதிப்பு : கூற்று” என்னும் நூலுக்கு வழங்கப்பட்டது. அதற்கான விழா 11.07.2024 அன்று சென்னை, தமிழ்நாடு இழை, கவின் பல்கலைக் கழக அரங்கில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு மு.பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் அருள் அவர்கள் விழாவை ஒருங்கிணைத்தார். இயக்குநர் அவர்களுக்கும், தந்தி தொலைக்காட்சிக்கும் நன்றி. அந்நிகழ்வு பற்றிய படங்கள் இவை:











புதன், 12 பிப்ரவரி, 2025

முனைவர் ஆ. மணி கல்வி / ஆராய்ச்சிப் பணிகள் (2018 - 2025)

 முனைவர் ஆ. மணி கல்வி / ஆராய்ச்சிப் பணிகள் (2018 - 2025)


முனைவர் ஆ. மணி 2018 - 25 வரை செய்த கல்வி / ஆராய்ச்சிப் பணிகள் பற்றிய குறிப்புக்கள் இவை. இவற்றுள் சில குறியீட்டுவடிவிலும் தரப்பட்டுள்ளன. 






ஞாயிறு, 19 ஜனவரி, 2025

அரிமாநோக்கு இதழ்க் கட்டுரை (2025 சனவரி): ஆறுமுக நாவலர் பாடங்களைத் திருத்தினார் என்ற கருத்து உண்மையா?

 அரிமாநோக்கு இதழ்க் கட்டுரை (2025 சனவரி): ஆறுமுக நாவலர் பாடங்களைத் திருத்தினார் என்ற கருத்து உண்மையா?

பல்கலைக் கழக நிதிநல்கைக் குழுவின் ஏற்பினைப் பெற்ற இதழாகிய அரிமாநோக்கு 2025 சனவரி  இதழில் என்னுடைய கட்டுரையாகிய ஆறுமுக நாவலர் பாடங்களைத் திருத்தினார் என்ற கருத்து உண்மையா? என்னும் கட்டுரை வெளிவந்துள்ளது. ஆற்றுப்படுத்திய பெரும்பேராசிரியர் முனைவர் வ. ஜெயதேவன் ஐயா அவர்களுக்கும், இதழ்க் குழுவினருக்கும் நன்றி மலர்கள். கட்டுரையின் படப்படி இது: 















ஆர் பன்னாட்டுக் கருத்தரங்கத் தலைமையுரை (2024)

                          ஆர் பன்னாட்டுக் கருத்தரங்கத் தலைமையுரை (2024)


அறிஞர் அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளை (ஆர்) ஆண்டுதோறும் திசம்பர்த் திங்களில் நடத்தி வருகின்ற பன்னாட்டுக் கருத்தரங்கின் கபிலர் அமர்வுக்குத் தலைமையேற்று நடத்தும் வாய்ப்பு அமைந்தது. விழுப்புரம், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் 21, 22.12.2024 ஆகிய நாட்களில் நிகழ்ந்த அக்கருத்தரங்கில் 22.12.2024 (ஞாயிறு) அன்று முற்பகல் நடந்த கபிலர் (இரண்டாம்) அமர்வில் நான் உட்பட எண்மர் கட்டுரை வழங்கினோம். வாய்ப்பினை வழங்கிய பெரும்பேராசிரியர் அறக்கட்டளையின் தலைவர் முனைவர் தாயம்மாள் அறவாணன் அம்மா அவர்களுக்கும், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் சு. தமிழ்வேலு ஐயா அவர்களுக்கும், முனைவர் இராச. கலைவாணி அம்மா அவர்களுக்கும், விழுப்புரம் தெய்வானை அம்மாள் கல்லுரித் தமிழ்த்துறையினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. அதன் காட்சிகள் இவை:


                                                                       அழைப்பிதழ்
                                                                      அழைப்பிதழ்

                                                        சிறு காணொலிக் காட்சி

                                                     கருத்தரங்க அமர்வுக் காட்சிகள்
                                                        கருத்தரங்க அமர்வுக் காட்சிகள்
                                                     கருத்தரங்க அமர்வுக் காட்சிகள்



 

ஆர் பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரை (2024): கா. நமச்சிவாய முதலியார் பதிப்பித்த தொல்.பொருள். இளம். அகத். புறத். பதிப்பாண்டு எது?

 ஆர் பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரை (2024): கா. நமச்சிவாய முதலியார் பதிப்பித்த தொல்.பொருள். இளம். அகத். புறத். பதிப்பாண்டு எது?


அறிஞர் அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளை (ஆர்) ஆண்டுதோறும் திசம்பர்த் திங்களில் நடத்தி வருகின்ற கருத்தரங்கில் பங்கேற்றுக் கட்டுரை படிக்கும் வாய்ப்பு அமைந்தது. விழுப்புரம், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் 21, 22.12.2024 ஆகிய நாட்களில் நிகழ்ந்த அக்கருத்தரங்கில் 22.12.2024 (ஞாயிறு) அன்று முற்பகல் கபிலர் (இரண்டாம்) அமர்வில் கா. நமச்சிவாய முதலியார் பதிப்பித்த தொல்.பொருள். இளம். அகத். புறத். பதிப்பாண்டு எது? என்னும் தலைப்பில் கட்டுரை வழங்கினேன். அதன் படப்படி இது. 














சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...