ஞாயிறு, 21 ஜூன், 2020

குறுந்தொகை ஆய்வுகள்: செய்தனவும் செய்ய வேண்டியனவும் - இணையவழிச் சிறப்புரை

குறுந்தொகை ஆய்வுகள்: செய்தனவும் செய்ய வேண்டியனவும்
இணையவழிச் சிறப்புரை

இனம் – பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ் நடத்திய இணையவழிக் கருத்தரங்கில் “குறுந்தொகை ஆய்வுகள்: செய்தனவும் செய்ய வேண்டியனவும்” என்னும் தலைப்பில் நேற்று (20.06.2020) சனிக்கிழமையன்று பிற்பகல் 05.30 முதல் 06.30 வரை உரை நிகழ்த்தும் வாய்ப்பு அமைந்தது. செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் முதலான நிறுவனங்களின் நிதிநல்கையில் நடத்தப்பட்ட கருத்தரங்கு / பயிலரங்குகளில் இதுகாறும் 70க்கும் மேற்பட்டவற்றில் உரையாற்றியுள்ளபோதிலும், கொரோனா – தீ நுண்மியால் விளைந்துள்ள இக்கொடுஞ்சூழலால் முதன்முறையாக இணையவழிக் கருத்தரங்கில் உரையாற்றும் சூழல் அமைந்தது.

கூகுள் சந்திப்பு – குறுஞ்செயலியில் நிகழ்ந்த அக்கருத்தரங்கை ஒருங்கிணைத்த இனம் இதழின் பதிப்பாசிரியர்கள் முனைவர் முனீஸ்மூர்த்தி, முனைவர் சத்யராஜ் ஆகியோருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். கருத்தரங்கில் பங்கேற்றுக் கருத்துரை வழங்கிய பெருமக்களுக்கு நன்றிமலர்கள். இனம் வலைக்காட்சியிலும் பகிரப்பட்டுள்ள உரைநிகழ்வு இதோ:  

https://youtu.be/EWLi_9P28WM


https://www.youtube.com/watch?v=EWLi_9P28WM#action=share

https://www.youtube.com/watch?v=EWLi_9P28WM&feature=youtu.be



நிகழ்ச்சி அழைப்பிதழ்


சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...