வியாழன், 21 ஜூலை, 2011

சிவத்தம்பி நினைவரங்கு 20.07.11

      அண்மையில் இயற்கை எய்திய பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் நினைவரங்கம் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக 20.07.11 புதன்கிழமை அன்று நடைபெற்றது. சிவத்தம்பி அவர்களின் நினைவைப் போற்றும்வகையிலும் அவருடைய தமிழ்ப்பணிகளை இளைய தலைமுறைக்கு எடுத்துரைக்கும் வகையிலும் இந்நிகழ்வு அமைக்கப் பட்டிருந்தது. இந்நிகழ்வில் நானும் கலந்துகொண்டு உரையாற்றக் காரணமாக அமைந்தவர் பேராசிரியர், முனைவர் நா. இளங்கோ அவர்கள். சிவத்தம்பியின் சங்க இலக்கிய ஆய்வுகளை மதிப்பிட ஓரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த அவருக்கும், நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் பக்தவச்சலபாரதி அவர்களுக்கும், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சிலம்பு நா. செல்வராசு அவர்களுக்கும் என் நன்றிமலர்கள்.

   நினைவரங்கக் காட்சிகள் இவை :

 வரவேற்புரை : முனைவர் பக்தவச்சல பாரதி அவர்கள்
 தலமையுரை : முனைவர் அ. பாண்டுரங்கன் அவர்கள்
உரையாளர் : முனைவர் ஆ. மணி அவர்கள்
 உரையாளர் : முனைவர் ஏ. இராஜலட்சுமி அவர்கள்

 உரையாளர் : முனைவர் ப. இரவிக்குமார் அவர்கள்

 உரையாளர் : திருமிகு சு. வேல்முருகன் அவர்கள்

 உரையாளர் : முனைவர் நா. இளங்கோ அவர்கள்

 உரையாளர் : முனைவர் ம. மதியழகன் அவர்கள்

 உரையாளர் : முனைவர் க. பஞ்சாங்கம்அவர்கள்

 உரையாளர் : பேராசிரியர் த. பழமலய் அவர்கள்

 நன்றியுரை : முனைவர் சிலம்பு நா. செல்வராசு அவர்கள்
 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ஆய்வாளர்
 பார்வையாளர் திரள்
 பார்வையாளர் திரள்
 பார்வையாளர் திரள்
 பார்வையாளர் திரள்

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...