சனி, 26 மார்ச், 2016

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 16) - அவரை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 16)  - அவரை

மலையைச் சார்ந்த இடங்களில் உள்ள புனத்தில் படர்ந்து வளர்கின்ற இக் கொடி இக்காலத்தில் மொச்சை என்று வழங்கப்பெறும். வீட்டில் வளர்கின்ற அவரைக் கொடி வேறு; இது வேறு. தினை விளைவதற்கு முன்னர் மலைவாணர் புனத்தில் அவரையை விதைப்பர்; தினை விளைந்து அறுக்கப்பட்ட பின்னர், அதன் தண்டிலே அவரைக் கொடி படர்ந்து கொத்துக் கொத்தாக மலரும்; புனத்தில் உள்ள புதல்களிலும் இக் கொடி படரும். இதன் மலருக்குக் கிளியின் மூக்கு உவமையாகக் கூறப்படும்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...