ஞாயிறு, 11 மார்ச், 2018

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 41) - மருத மரம், மாணைக்கொடி, மாமரம், மிளகுக்கொடி

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 41) - மருத மரம், மாணைக்கொடி, மாமரம், மிளகுக்கொடி


மருத மரம்

    மருத நிலத்துக்குரிய மரம் இது; நீர்த்துறைகளில் வளர்வது. இதன் மலர் செந்நிறம் உடையது; நீர்த்துறைகளில் நீராட வரும் யானைகளை இம்மரத்தில் பிணித்தல் வழக்கம்.
 
மாணைக் கொடி

    குறிஞ்சி நிலத்தில் வளரும் பெரிய கொடி வகைகளுள் ஒன்று. குண்டுக் கல்லின் அருகே படர்ந்த இக்கொடி அயலில் தூங்கும் களிற்றின் இவருமென ஒரு செய்தி ஒரு செய்யுளில் கூறப்பட்டுள்ளது.
 
மாமரம்

    இம்மரம் பெரும்பாலும் மருத நிலத்துக்குரியது; சிறுபான்மை கடற்கரையில் இருப்பதாகக் கூறப்படும். தேமா என்பது மாவில் ஒரு சாதி. அதன் பழத்தை, “பால்கலப் பன்ன தேக்கொக்கு” என ஒரு புலவர் சிறப்பிக்கின்றார். பொய்கை அருகில் உள்ள மாவின் பழம் அப்பொய்கையில் விழுதலும், அதனை வாளைகள் கவ்வி உண்ணுதலும், வௌவால்கள் மாம்பழத்தை உண்ணுதலுமாகிய செய்திகள் இந்நூலில் காணப்படும். குயில் மாவின் பூந்தாதைக் கோதும். மாம்பூவில் வண்டு விழுந்து பயிலும். இதன் பூந்தாதுக்குப் பொன் உவமை கூறப்படும். இதன் தளிரை மகளிர் அடிக்கும் மேனிக்கும் ஒப்புக் கூறுவர். மாவின் வடு நறுமணம் உடையது.
 
மிளகு கொடி

    மலைப்பக்கத்தில் வளர்வது. அதனால் “கறிவள ரடுக்கம்” என்று புலவர் மலைச் சாரலைச் சிறப்பிப்பர்.

(தொடரும்)


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...