ஞாயிறு, 11 மார்ச், 2018

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 44) - யாமரம், வரகு, வழை, வள்ளி

                     குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 44) -  யாமரம், வரகு, வழை, வள்ளி


யாமரம்

    இம்மரம் பாலை நிலத்துக்குரியது. வயிரமுடையதாகவும் பொரிந்த அடியை உடையதாகவும் கூறப்படும். யானை இதன் பட்டையை உரித்து உண்டு, அதில் உள்ள நீரினால் நீர் வேட்கையைத் தணித்துக் கொள்ளும். சிறுபான்மை குறிஞ்சி நிலத்திலும் இது காணப்படும். அங்கே கானவர் இதனை வெட்டி விட்டுத் தினையை விதைப்பர்.
 
வரகு

    இது முல்லை நிலத்தில் பயிர் செய்யப்படுவது; கார்காலத்தில் தளிர்த்து விளங்கும். செம்மண் மேட்டில் நன்றாக வளரும்; மானுக்கு உணவாகும். இதன் கதிரை அரிந்த தாள், “குறைத்தலைப் பாவை” என்று கூறப்படுகின்றது. அத்தாளில் முல்லைக் கொடி படரும்.
 
வழை

    இது குறிஞ்சி நிலத்தில் வளரும் மரங்களில் ஒன்று. இது வளர்ந்த இடத்தை “வழையம லடுக்கம்” என்று ஒரு புலவர் சிறப்பிக்கின்றார்.
 
வள்ளி

    இது கிழங்கை உடையதொரு கொடி. இது படர்ந்த இடம், “வாடா வள்ளியங்காடு” என்று பாராட்டப் பெறுகின்றது.

(தொடரும்).

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...