ஞாயிறு, 11 மார்ச், 2018

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 42) - முல்லை

                                 குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 42) - முல்லை



முல்லை

    முல்லை நிலத்துக்குரிய அடையாளமாக விளங்குவது இது; மழை பெய்யும் கார் காலத்தில் வளம் பெற்று மாலைக் காலத்தில் மலர்வது. முல்லை மலர்வதனால் தலைவி கார் காலத்தின் வரவை அறிவாள். சில இடங்களில் வீட்டுத்தோட்டத்தில் உள்ள மரங்களில் படரும்படி முல்லையை வளர்ப்பர். அம்மலரைப் பறித்து மகளிர் அணிந்து கொள்வர்.

    தலைவன் தான் சென்ற வினையை முடித்து வருகையில் இடையிலே உள்ள முல்லை நிலத்தில் முல்லைக்கொடிகள் பூத்து நிற்பது கண்டு, “யான் உரியகாலத்தே தலைவிபாற் சென்றிலே னென்று கார்காலம் முல்லையரும்பாகிய பற்களைக் காட்டிச் சிரிக்கின்றது” என்று கூறுவதாக ஒரு புலவர் அமைக்கின்றார். கதிரை அறுத்த வரகின் தாளிலும் துறுகல்லிலும் முல்லைக் கொடி படர்ந்து மலரும். முல்லை அரும்பிற்கு மகளிர் பல்லும் காட்டுப் பூனையின் பல்லும் நட்சத்திரங்களும் ஒப்பிடப்படுகின்றன. ஆடவர் மேனியும் உத்தம மகளிர் நுதலும் முல்லையின் மணத்தை உடையன என்பர். இதன் மலரை இடையரும் சூடுவர். முல்லை, காந்தள், குவளை என்பவற்றைச் சேர்த்து மாலையாகக் கட்டுதல் வழக்கம். செம்முல்லை தளவெனப்படும்.

(தொடரும்).

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...