சனி, 19 பிப்ரவரி, 2011

வெண்பாப் பாட்டியல், வரையறுத்த பாட்டியல் இணைந்த பதிப்பு 1969

          பாட்டியல் என்பது எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கண ஒழிபியல் என்பர். ஐந்திலக்கணங்களில் கூறப்படாத செய்திகள் இப்பாட்டியல் நூல்களில் கூறப்பட்டுள்ளன.  பாட்டியலின் மரபை வெண்பா அமைப்பில் கூறுவதால் வெண்பாப்பாட்டியல் எனப் பெயர் பெற்றது. இந்நூலின் ஆக்கத்திற்குக் காரணமாக இருந்த வச்சணந்தியின் பெயராலும் வச்சணந்திமாலை என அழைக்கப்படுகின்றது.

         வெண்பாப்பட்டியலின் ஆசிரியர் குணவீர பண்டிதர் ஆவார். இந்நூலின் பாயிரவுரை, இந்நூலுக்கு முதல் நூல் இந்திரகாளியம் எனக் குறிப்பிடுகின்றது. இது சிலப்பதிகார அடியார்க்குநல்லார் உரையில் கூறப்படுகின்ற யமளேந்திரர் செய்த இசைத்தமிழ் நூலாகிய இந்திரகாளியத்தின் வேறானது என்பர்.  வெண்பாப்பட்டியலின் காலத்தை அறியமுடியவில்லை. எனினும் இதன் உரை இந்நூல் திரிபுவனத்தேவன் என்னும் அரசன் காலத்தில் எழுந்தது எனக் கூறுகின்றது. 

         சம்பந்தப் பாட்டியல் என்றும் அழைக்கப்படுகின்ற வரையறுத்த பாட்டியல் சீர் முதலிய மங்கலச் சொற்களின் பொருள் உணர்த்தும் நூலாகும். இந்நூலாசிரியர் சம்பந்தர் என்றும், செய்வித்தவர் சம்பந்தர் என்றும் கூறுவர். இவ்விரு நூல்களின் விளக்கவுரைகளையும் செய்தவர் சென்னைத் தமிழ்ப்பண்டிதர் கொ.இராமலிங்கத் தம்பிரான் ஆவார். இந்நூலின் முதற்பதிப்பு 1936இலும், அதன் மறுஅச்சுக்கள் 1964, 1969 ஆகிய ஆண்டுகளில் வந்தன. 1969 ஆம் ஆண்டுப் பதிப்பின் தலைப்புப் பக்கம் இது.


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...