திங்கள், 14 பிப்ரவரி, 2011

யாப்பிலக்கணப் பதிப்பு 1967

          யாப்பிலக்கணம் என்பது 19 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட உரைநடை நூல். இந்நூலின் ஆசிரியர் திருத்தணிகை விசாகப்பெருமாள் ஐயர் ஆவார். இவருடைய தந்தை திருத் தணிகை கந்தப்ப ஐயர், திருவாவடுதுறை கச்சியப்ப முனிவர்ன் மாணவர் ஆவார். விசாகப் பெருமாள் ஐயரின் உடன்பிறந்தவர் திருத்தணிகை சரவணப்பெருமாள் ஐயர். இவர்கள் இருவரும் திருக்குறள், நைடதம், பிரபுலிங்கலீலை ஆகிய நூல்களுக்கு எளிய உரைகளை எழுதி வெளியிட்டுள்ளனர்.

        விசாகப் பெருமாள் ஐயர் பெய்ரில் 1828இல் இலக்கணச் சுருக்க வினாவிடை என்ற நூல் வெளிவந்தது. ஐந்திலக்கணம் கூறும் இந்நூலில் யாப்பிலக்கணப் பகுதி மட்டும் பாலபோத இலக்கணம் என்னும் பெயரில் தனித்து வெளியிடப்பட்டது. அந்நூலில் இருந்த வினாக்களை மட்டும் நீக்கிவிட்டு யாப்பிலக்கணம் என்ற பெயரில் தணிநூலாகக் கழகத்தினர் வெளியிட்டனர்.

         காரிகை கற்பாருக்குப் பயன்படும்பொருட்டு இந்நூலைக் கொ. இராமலிங்கத் தம்பிரான் என்பவரைக் கொண்டு முறைப்படுத்தியும் சில குறிப்புக்களைச் சேர்த்தும் விளக்கியும் வெளியிட்டுள்ளோம் எனக் கழகத்தினர் குறித்துள்ளனர். ஒருவருடைய நூலை இன்னொருவரைக் கொண்டு இடைச்செருகியும் விளக்கியும் சேர்க்கை இது, விளக்கியது இது என எவ்வகைக் குறிப்புக்களும் இல்லாமல் பதிப்புரையில் மட்டும் கூறிவிட்டு வெளியிடுவது எவ்வகைப் பதிப்புமுறையோ? நாம் அறியோம்.

     யாப்பிலக்கணம் 1937 இலில் கழகம் வழியாக முதற்பதிப்புக் கண்டது. அதன் மறுஅச்சுக்கள் 1940, 1944, 1947, 1950, 1955, 1960, 1964, 1967 ஆகிய ஆண்டுகளில் வெளியாகின. 1967 ஆம் ஆண்டுப் பதிப்பின் தலைப்புப் பக்கம் இது.


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...