புதன், 23 பிப்ரவரி, 2011

மதுரை, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரிப் பயிலரங்கு 20.2.11

    மதுரை, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நடைபெற்றுவரும் சங்க இலக்கியப் பத்துநாள் ( 16.2.11 - 25.2.11) பயிலரங்கில் உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. நான் கல்வி பயின்ற மண்ணில் பயிலரங்க உரையாற்றும் முதல் வாய்ப்பினை வழங்கிய தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு. பெர்னாட்சா அவர்களுக்கும், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் அழகர்நாதன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிமலர்கள். மதுரைக்காரர்கள் பாசமுடைய நெஞ்சமும் பாராட்டும் பேருள்ளமும் வாய்த்தவர்கள் என்பதைத்  தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு. பெர்னாட்சா அவர்களையும், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் அழகர்நாதன் அவர்களையும் காண்போர் அறிவர். நல்லுள்ளம் படைத்த இவர்களுக்கு என் நன்றிப்பூக்கள்.

       என்னுடைய வளர்ச்சிப் பின்புலமாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் முனைவர் இரா. கோதண்டராமன் அய்யா அவர்களுக்கு நான் நன்றி என ஒரு சொல் சொல்வது போதாது.

    பயிலரங்க உரைக்காட்சிகள் இதோ.

தமிழ்த்துறைத் தலைவர் அவர்களின் அறிமுக உரை

 என்னுரை : உரைப்பொருள் : சங்க இலக்கியக் கைக்கிளை மரபுகள்
 கருத்தரங்க் ஒருங்கிணைப்பளார் அவர்களின் கருத்துரை
 ஆய்வாளரின் நன்றியுரை - 1
ஆய்வாளரின் நன்றியுரை - 2

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...