வெள்ளி, 10 ஜூன், 2011

கலித்தொகை பதிப்பு வரலாறு (1887 - 2010)

      காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக முனைவர் பட்டத் தமிழ் ஆய்வாளர் மு.முனீஸ்மூர்த்தி எழுதிய கலித்தொகைப் பதிப்பு வரலாறு என்ற நூலைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. காவ்யா வெளியிட்டிருக்கும் நூல்களில் நன்னூல் வரிசையில் மற்றொரு நூல். 224 பக்கங்கள். விலை ரூ.170.00.
        தற்போது திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகப் பெரியார் உயராய்வு மையத்தின் தலைவராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் முனைவர் இரா. அறவேந்தன் அவர்களின் வழிகாட்டலில் முனைவர் பட்ட ஆய்வு செய்துவரும் முனீஸ்மூர்த்தி பழகுதற்கு இனியவர்; நற்பண்புகள் பல செறிந்தவர்; பிறரின் உளமறிந்து உதவும் தன்மையர்; அறவேந்த ஆளுமையை இவரிடம் பலநிலைகளிலும் நாம் காணலாம். அறிவிலும்; ஆராய்ச்சியிலும் இவர் ஆழங்காற்படுவார் என்பதற்கும், முனைவர் அறவேந்தன் அவர்களின் மாணவர் இவர்  என்பதற்கும் இந்நூல் ஒரு சான்று.
    அறிவுவயப்பட்ட ஆய்வு என்பதே இன்றைய தேவை. உணர்வுவயப்பட்ட ஆய்வு எந்த நன்மையையும் தராது. இளம் ஆய்வாளர்களுக்குப் பல்வேறு திறன்கள் இருந்தாலும் அவற்றை நல்லறிவு வழியில் முறைப்படுத்தி வெளியிடும்போதுதான் தமிழும் தமிழ்ச்சமூகமும் நன்மை பெறமுடியும். இனிவரும் காலம் தமிழுக்கு நற்காலம் என்பது இந்நூலால் நாம் அறியும் உண்மையாகும். இந்த உண்மையை உணர்ந்துகொள்ள விரும்புவோர் கலித்தொகைப் பதிப்பு வரலாறு என்ற இந்நூலை வாங்கிப் படிக்கலாம்.

 நூலின் முன்பக்கம்
 நூலின் பின்பக்கம்

1 கருத்து:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நல்லதொரு அறிமுகம் முனைவரே..

நான் அங்கு முனைவர் பட்டம் செய்தபோது முதுகலை சேர்ந்தார் இந்த நண்பர். அப்போதே ஆர்வமுள்ள மாணவராகவே திகழ்ந்தார் ஐயா அறவேந்தன் அவர்களின் நெறிகாட்டுதலில் மேலும் செம்மையுடையவராக ஆய்வுலகில் அறிமுகம் ஆகியிருக்கிறார்.

அவருக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...