திங்கள், 6 ஜூன், 2011

தொல்காப்பியர் விருது

      இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் 42 ஆம் கருத்தரங்கம் மதுரை காமராசர் பல்கலைக் கழகத் தமிழியற்புலத்தில் கடந்த மேத் திங்கள் 21, 22 ஆம் நாட்களில் நடைபெற்றது. கடந்த 2000ஆம் ஆண்டுமுதல் இக்கருத்தரங்குகளில் தொடர்ந்து எழுதுவதை நான் வழக்கமாகக் கொண்டுள்ளேன். இவ்வாண்டும்  குறுந்தொகைச் சுவடிகளும் சுவடிப் பதிப்புக்களும் என்ற பொருண்மையில் ஆய்வுரை எழுதியுள்ளேன்.  இந்திய அளவிலான கருத்தரங்காகிய இதில், கடந்த ஆண்டு  நான் எழுதிய  தொல்காப்பியக் கருத்தியல் புலப்பாட்டுநெறிகள்  என்ற தலைப்பிலான கட்டுரைக்குத் தொல்காப்பியர் விருதுப் போட்டிக்கான பரிசு அக்கருத்தரங்கில் வழங்கப்பட்டது. கருத்தரங்கக் காட்சிகள் இவை.

 
 மதுரை காமராசர் பல்கலைக் கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் திரு. 'அக்ரி'. கணேசன் அவர்கள் தொல்காப்பியர் விருதுப் போட்டிக்கான சான்றிதழை வழங்கிச் சிறப்பிக்கின்றார். உடன் பேராசிரியர் இரா.மோகன் அவர்கள்.
 மதுரை காமராசர் பல்கலைக் கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் அவர்கள், தமிழின் சிரிப்பு நூலுக்காக முனைவர் இ.கி.இராமசாமி அவர்களுக்குச் சிறப்புச் செய்கின்றார்.
மதுரை காமராசர் பல்கலைக் கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் திரு. 'அக்ரி'. கணேசன் அவர்கள், செம்மொழித் தமிழ் ஆய்வுரைகள் நூலுக்காக சிறப்புச் செய்கின்றார்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...