செவ்வாய், 15 அக்டோபர், 2013

வெல்லும் தூய தமிழ் - திங்களிதழ் - அறிமுகம்

    புதுச்சேரியில் சிற்றிதழ்கள் பலவாகப் பெருகி இருக்கின்றன. ஆனால் அவற்றுக்கிடையே தனித்தன்மையும் பீடும் உடைய இதழ் என மதிப்பிட்டால் ஒரு சிலவே அமையும். சில இதழ்கள் தனி மனிதர்களின் பெருமையைப் பறைசாற்றவே வருகின்றனவோ என எண்ணத் தோன்றும் வகையில் இருப்பதைக் காணலாம். ஆனால் அவற்றிலிருந்து மாறுபட்டு வெல்லும் தூயதமிழ் திங்கள் இதழ் அமைந்திருப்பதை அவ்விதழைப் பார்த்தவுடன் நாம் அறியலாம்.
        ஓர் இதழ் 20 ஆண்டுகளைக் கடந்து வெளிவருவதே வரலாற்றுச் சாதனை. அதுவும் உரிய காலத்தில் இடைவெளியில்லாமல் வெளிவருவது இன்றைய வணிக உலகில் எத்தகைய அருஞ்செயல் என்பதை எண்ணிப்பாருங்கள்.
      தமிழ் இதழ் எனச் சொல்லிக்கொண்டுத் தமிழ்ச் சொற்களை ஆளவோ, பிழையில்லாமல் செய்திகளை வெளியிடவோ இயலாத இதழ்களுக்கிடையே தனித்தமிழில் ஓர் இதழை வெளியிட்டுப் பரப்புவது என்பதில் எத்தனை துன்பமிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால் வெல்லும் தூயதமிழ் இதழின் சிறப்பும், சிறப்பாசிரியர் முனைவர் தமிழமல்லன் பேருள்ளமும், தமிழ் நெஞ்சமும் விளங்காமல் போகாது. நெடுநாட்களாகவே வெல்லும் தூயதமிழ் இதழ் பற்றி எழுதவேண்டும் என நினைத்திருந்தேன். இன்றுதான் அதற்கான சூழல் அமைந்தது.
            தமிழில் பிழையற எழுதக் கற்றுக் கொள்ளவேண்டுமா?. தனித்தமிழில் உரையாட வேண்டும் என்ற எண்ணமுண்டா?. மறைமலையடிகள் ஊட்டிய உணர்வில் கலந்துருக வேண்டுமா?. இதற்கெல்லாம் தனியே சென்று கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. ஓர் எளிய வழியுண்டு. வெல்லும் தூயதமிழ் திங்களிதழைப் படிப்பதுதான் அது. தமிழ் உணர்வாளர்கள் இதுபோன்ற இதழ்களைப் புரப்பது போற்றுதலுக்குரியது என்பதை மனங்கொள்ள வேண்டும். தனித் தமிழ் போற்றுவோம். தமிழ் போற்றுவோம்.

வெல்லும் தூயதமிழ் இதழின் முகப்பட்டை (2013 அகுத்தோபர்).

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...