ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 23) - ஈங்கை, உகாய்

  குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 23) -  ஈங்கை, உகாய்

ஈங்கை

    இஃது ஒரு வகைக் கொடியென்று தோற்றுகின்றது. இது நுண்ணிய முள்ளை உடையது. கூதிரக் காலத்தில் மலர்வது. இதன் அரும்பு செந்நிறத்தை உடையது. இதன் மலரில் பஞ்சி போன்ற துய் இருத்தலின், “வண்ணத் துய்ம்மலர்” என்று சிறப்பிக்கப் பெறும்.
 
உகாய்

    இது பாலை நிலத்தில் உள்ள மரங்களில் ஒன்று. உகாயென்று வழங்குவதே பெரும்பான்மை மரபாயினும் உகாவென்னும் பாடம் சில இடங்களிலே காணப்படுகின்றது. இதன் அடி மரம் சாம்பல் போன்ற நிறமுடையது; அதற்குப் புறாவின் புறத்தை உவமையாகக் கூறுவர்; “புன்கா லுகாஅய்”, “புல்லரை யுகாஅய்” என்ற தொடர்களால் அது மங்கிய நிறத்தை உடைய தென்பது போதரும். இம்மரத்தில் கனிகள் செறிந்திருக்கும்; அவை உருண்டையாகவும் மஞ்சள் நிறமாகவும் இருத்தலின் அவற்றிற்குப் பொற்காசை உவமை ஆக்குவர். இம் மரம் பாலையின் வெம்மையால் தழைச் செறிவின்மையின் இதன் நிழல் இடையிட்டுத் தோன்றும்; அதனை “வரிநிழல்” என்பர். அந் நிழலில் மலைப்பசு தங்கியிருத்தல் ஒரு செய்யுளில் கூறப்படுகின்றது.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...