ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 30) - காயா, குரவம், குருந்தம்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 30) -  காயா, குரவம், குருந்தம்

காயா மரம்

    இக்காலத்தில் இது காசாவென வழங்குகின்றது. இது முல்லை நிலத்திற்குரிய மரம்; கார்காலத்தில் மலர்வது; இதன் மலர் நீல நிறமுடையது. காயா மரத்தின் பூக்கெழு பெருஞ்சினை மெல்லிய மயிலின் கழுத்தைப் போலத் தோற்றுவதாக ஒரு புலவர் பாடுகின்றார்.
 
குரவம்

    குராவெனவும் இது வழங்கும். இது பெரும்பாலும் பாலை நிலத்திற்கு உரியதாயினும் நெய்தல் நிலத்தில் வளர்ந்ததாக ஒரு செய்யுளில் கூறப்படுகின்றது. இது திணை மயக்கத்தின்பாற் படும். அந்நிலத்தில் புன்க மரத்திற்கருகில் பல மலர்களால் நிறைந்து இம்மரம் விளங்குவதை ஒரு புலவர் புனைகின்றார்.
 
குருந்த மரம்

    முல்லை நிலத்திற்குரிய மரம் இது. கார்காலத்தில் மலர்வது; கொன்றை மரத்தோடு சேர்த்துச் சொல்லப்படுவது.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...