வியாழன், 3 ஜனவரி, 2013

உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரிப் பயிலரங்கு - 5

திருக்கனூர், உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரியில் தமிழ்ச் செவ்வியல் இலக்கண, இலக்கியங்கள் பயிற்றுவித்தல் பயிலரங்கில் உரையாற்றிய அறிஞர்கள் பற்றிய காட்சித் தொகுப்பின் இரண்டாம் பகுதி இது.




பேராசிரியர் வே. சிவசுப்பிரமணியன் அவர்களின் உரை : சார்பெழுத்துக் கோட்பாடு, வேற்றுமை, வேற்றுமை மயக்கம்.

                                     
அறிஞர் அறிமுக உரை : முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள்.


முனைவர் ஆ. மணி அவர்களின் உரை: தொல்காப்பிய அகப்பொருளும் உரையாசிரியர்களும்


பேராசிரியர் கு. சிவமணி அவர்களின் உரை: செவ்வியல் தமிழ் இலக்கியங்கள் கற்பித்தல் 1 & 2


முனைவர் சி. சித்ரா அவர்களின் உரை:  புறநானூறு கற்பித்தல், அகநூல்கள் கற்பித்தல்


ஆய்வாளர் கருத்துரை


பயனாளர்களும் சுவைஞர்களும்


பயனாளர்களும் சுவைஞர்களும்

வெள்ளி, 28 டிசம்பர், 2012

உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரிப் பயிலரங்கு - 4

புதுச்சேரி, உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரியில் சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் 12.12.12 முதல் 21.12.12 வரை பத்து நாட்கள் நடைபெற்ற தமிழ்ச் செவ்வியல் இலக்கண, இலக்கியங்கள் பயிற்றுவித்தல் பயிலரங்கில் தமிழகம், புதுச்சேரியின் பகழ் பெற்ற அறிஞர் பெருமக்கள் உரையாற்றிச் சிறப்பித்தனர். அவை பற்றிய காட்சித் தொகுப்பு இது.


முனைவர் வீகோபால்அவர்களின் உரை :இலக்கணநூலார் கூறும் எழுத்துக்களின் பிறப்பு




முனைவர் நா. இளங்கோ அவர்களின் உரை:அகப்பாடல்களைப் பொருள்கொள்ளும் முறை


 முனைவர் ஆ.மணி அவர்களின் உரை: தொல்காப்பிய இடைச்சொல்லும் பிற்கால இலக்கணங்களும்


 அறிஞர் அறிமுகவுரை : முனைவர் ஆ.மணி


முனைவர் அ. சீனிவாசன் அவர்களின் உரை:மொழியியல் நோக்கில் எழுத்து பயிற்றுவித்தல்,மொழியியல் நோக்கில் புணர்ச்சி இலக்கணம் 



 அறிஞர் அறிமுகவுரை : முனைவர் ஆ.மணி


 முனைவர் இரா. கோதண்ட ராமன் அவர்களின் உரை : நான்கன் உருபும் புணர்ச்சி மரபும், அக மீட்டுருவாக்கம்


பயனாளர் பகுதியில் முனைவர் அ.சீனிவாசன், முனைவர் ம. இலட்சுமணன், முனைவர் ஆ.மணி ஆகியோர்


முனைவர் பெ. மாதையன் அவர்களின் உரை :  செவ்வியல் இலக்கண, இலக்கியங்களில் வினைச்சொல்,  செவ்வியல் இலக்கண, இலக்கியங்களில் வினையெச்சம்


 அறிஞர் அறிமுகவுரை : முனைவர் ஆ.மணி


முனைவர் ப. மருதநாயகம்  அவர்களின் உரை : தொல்காப்பியம் பயிற்றுவித்தல்,தமிழ் அற இலக்கியங்கள் பயிற்றுவித்தல்


முனைவர் பெ. மாதையன் அவர்களின் உரை : மொழித்திறன் வளர்ச்சியில் அகராதிகளின் பங்கு


கல்லூரித் தாளாளர் முனைவர் ம. இலட்சுமணன் அவர்களின் அறிஞர் அறிமுக உரை 


முனைவர் வெ.மு. சாசகான் கனி அவர்களின் உரை: அகத்திணைக் கோட்பாடுகள்


முனைவர் இரா. சீனிவாசன் அவர்களின் உரை:  மெய்ப்பாட்டியல் உணர்வும் வெளிப்பாடும், தொல்காப்பிய உரைகளில் மரபுவழிப் பயிற்சியும் பயிறுவித்தலும்


 கல்லூரித் தாளாளர் முனைவர் ம. இலட்சுமணன் அவர்களின்  கருத்துரை


முனைவர் ச. குருசாமி அவர்களின் உரை: உரிச்சொல் விளக்கம், பயிற்றுவித்தல் மரபும் செவ்வியல் இலக்கண உரைகளும்


பயனாளர் பகுதியில் முனைவர் ம. இலட்சுமணன், முனைவர் ஆ.மணி ஆகியோர்


முனைவர் கோ. பழனிராஜன் அவர்களின் உரை : தொல்காப்பியத்தில் தொடரியல் கருத்துக்கள்


முனைவர் இரா. இலட்சாராமன் அவர்களின் உரை : குறுந்தொகை கற்பித்தல்


பயனாளர் பகுதியில் துணைப்பேராசிரியர்கள் ஆர். திருமாவளவன், அருள் பிரகாசம் ஆகியோர்


அறிஞர் அறிமுக உரை: துணைப் பேராசிரியர் பா. இலதா அவர்கள்


முனைவர் ந. தெய்வசுந்தரம் அவர்களின் உரை : கணினி மொழியியலும் இலக்கணமும் 1, கணினி மொழியியலும் இலக்கணமும் 2


பயனாளர் பகுதியில் முனைவர் ஆ.மணி,  முனைவர் ம. இலட்சுமணன், முனைவர் தி. செல்வம்  ஆகியோர்



முனைவர் இரா. சம்பத் அவர்களின் உரை: செய்யுளியலும் இலக்கியவியலும்



முனைவர் பக்த வச்சல பாரதி அவர்களின் உரை : செவ்வியல் இலக்கியங்கள் கற்பித்தல் : மானிடவியல் அணுகுமுறை


ஆய்வாளர் வினா நேரம்


பயிலரங்கப் பயனாளர்கள்

இன்னும் வளரும்...





சனி, 22 டிசம்பர், 2012

உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரிப் பயிலரங்கு - 3


         புதுச்சேரி, திருக்கனூரில் இயங்கி வரும் உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரியில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கையில் நடைபெற்ற பத்துநாள் பயிலரங்கின் தொடக்கவிழா 12.12.12 அன்று முற்பகல் 9.30 மணியளவில் நடைபெற்றது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் முனைவர் க. இராமசாமி ஐயா அவர்கள் பங்கேற்றுத் தொடக்கவிழாப் பேருரையாற்றிய அப்பயிலரங்கு பற்றிய செய்திக்குறிப்புக்கள் இதோ:

 தமிழ்முரசு 14.12.12 நாள் செய்தி

மாலைமலர் 14.12.12 நாள் செய்தி

 தினமணி செய்திக்குறிப்பு


உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரிப் பயிலரங்கு - 2

புதுச்சேரி, திருக்கனூரில் இயங்கி வரும் உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரியில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கையில் நடைபெற்ற பத்துநாள் பயிலரங்கின் தொடக்கவிழா 12.12.12 அன்று முற்பகல் 9.30 மணியளவில் நடைபெற்றது.

   விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் முனைவர் க. இராமசாமி ஐயா அவர்கள் பங்கேற்றுத் தொடக்கவிழாப் பேருரையாற்றினார்.  விழாவிற்குக் கல்லூரித் தாளாளர் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார்.  புதுவைப் பல்கலைக் கழகத் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் அ.அறிவுநம்பி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.  பயிலரங்கத்தின் நோக்கம் பற்றிய கருத்துக்களை முனைவர் ஆ.மணி எடுத்துரைத்தார்.  உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரித் தமிழ்த்துறைத் துணைப்பேராசிரியர் பா.இலதா வரவேற்புரை ஆற்றினார். உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரியின்  வணிகவியல்துறைத் தலைவர் ஆர். திருமாவளவன் நன்றி நவின்றார். விழாக் காட்சிகள் இவை:


 விளக்கேற்றும் நிகழ்ச்சி

முனைவர் ஆ.மணி அவர்களுக்குக் கல்லூரித் தாளாளர் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள் சிறப்புச் செய்தல். 

முனைவர் ஆ.மணி பயிலரங்க நோக்கவுரையாற்றுதல்.

 செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் முனைவர் க. இராமசாமி ஐயா அவர்கள் தொடக்கவிழாப் பேருரையாற்றுதல்.


புதுவைப் பல்கலைக் கழகத் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் அ.அறிவுநம்பி அவர்கள் வாழ்த்துரை வழங்குதல்.


 உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரியின்  வணிகவியல்துறைத் தலைவர் ஆர். திருமாவளவன் அவர்கள் நன்றியுரையாற்றல். 





உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரிப் பயிலரங்கு -1

திருக்கனூர், உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரி, சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் கடந்த 12.12.12 முதல் 21.12.12 வரை பத்துநாள் பயிலரங்கு ஒன்றினைத் தமிழ்ச் செவ்வியல் இலக்கண, இலக்கியங்கள் பயிற்றுவித்தல் என்ற தலைப்பில் நடத்தியது. புதுச்சேரி கல்வியியல் கல்லூரிகளின் வரலாற்றில் ஒரு புதிய, அரிய சாதனையாக மலர்ந்த இப்பயிலரங்கு கல்லூரித் தாளாளர் முனைவர் ம. இலட்சுமணன் அவர்களின் ஆற்றல் வாய்ந்த வழிகாட்டலில் நடைபெற்றது. கல்லூரித் துணை முதல்வர் பேரா. உஷா இலட்சுமணண் அவர்களும், தாகூர் கலைக்கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஆ. மணி அவர்களும் பயிலரங்க ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டனர்.  சிற்றூர்ப் புறத்தில் அமைந்த இக்கல்லூரியில் இத்தகைய பத்துநாள் பயிலரங்கு நடைபெற்றது ஒரு மிகப்பெரிய சாதனை என்றே சொல்லவேண்டும். அப்பயிலரங்கின் அழைப்பிதழ் இது.


தொடக்கவிழா, நிறைவுவிழா அழைப்பிதழ்கள் 


பயிலரங்கில் உரையாற்றும் அறிஞர் பெருமக்களும் தலைப்புக்களும்

புதன், 19 டிசம்பர், 2012

உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரிப் பட்டமளிப்பு விழா

       புதுச்சேரி, திருக்கனூரில் இயங்கி வரும்  உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரியின் ஏழாம் பட்டமளிப்பு விழா 02.11.2012 அன்று நடைபெற்றது. புதுச்சேரி ஊரகப் பகுதி மாணவர்களின் கல்விக்காக எஸ்.எம்.ஜி. அஞ்சலை அம்மாள் கல்வி அறக்கட்டளை என்ற பெயரிய அமைப்பொன்றினை நிறுவி, அதன்மூலம் மேல்நிலைப்பள்ளி, கல்வியல் கல்லூரி ஆகியவற்றை மிகச் சிறப்பாக நடத்திவரும் கல்வியாளர்; போற்றுதலுக்குரிய முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள் விழாவிற்குத் தலைமையேற்று உரையாற்றினார்.  100 மாணவர்கள் இளநிலைக் கல்வியியல் பட்டம்பெற்ற அவ்விழாவில் மத்திய எண்ணைவித்துக் கழகச் செயல் இயக்குநர் முனைவர் பரமாத்மா அவர்கள் மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார். தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் ஆ.மணி வாழ்த்துரையாற்றினார். கல்வி நிறுவனங்களைச் சிறப்பாக நடத்துவதற்குப் பின்புலமாக விளங்குகின்ற  துணை முதல்வர் பேரா. உஷாஇலட்சுமணன் அவர்கள் விழாவை ஒருங்கிணைத்து நடத்தினார். இவ்விழா பற்றிப் புதுவை பூமி இதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இது. 




புதன், 21 நவம்பர், 2012

பல்துறை நோக்கில் தொல்காப்பியம் - கருத்தரங்கு 31.01.2013 – 01.02.2013


புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறை
புதுச்சேரி பிரெஞ்சு நிறுவன இந்தியவியல் துறையுடன்
இணைந்து
பல்கலைக் கழக நிதிநல்கைக் குழு உதவியுடன் நடத்தும்
பல்துறை நோக்கில் தொல்காப்பியம் - கருத்தரங்கு
31.01.2013 – 01.02.2013
அறிவிப்பு & அழைப்பு மடல்
தமிழன்புடையீர்,
வணக்கம். புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறை, புதுச்சேரி பிரெஞ்சு நிறுவன இந்தியவியல் துறையுடன்இணைந்து பல்கலைக் கழக நிதிநல்கைக் குழுவின் நிதியுதவியுடன் இருநாள் கருத்தரங்கு ஒன்றை 31.01.13 – 01.02.13 ஆம் நாட்களில் நடத்த வுள்ளது.
            அக்கருத்தரங்கிற்குத் தொல்காப்பியத்தைப் பல்துறை நோக்குகளில் அணுகி விளக்கம் செய்யும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. மொழியியல் நோக்கில் தொல்காப்பியம், உளவியல் நோக்கில் தொல்காப்பியம், அறிவியல் நோக்கில் தொல்காப்பியம், பயிரியல் நோக்கில்  தொல்காப்பியம், உயிரியல் நோக்கில் தொல்காப்பியம் என்றினைய தலைப்புக்களிலோ, ஒரு துறையுடன் நுணுக்கமாக அணுகும் வகைகளிலோ கட்டுரைகள் அமையலாம்.

·                                  கட்டுரைகள் ஏ4 அளவுத் தாளில் 5 பக்கங்களுக்கு மிகாமல் அமையலாம்.

·         தமிழ் யுனிகோடு எழுத்துரு வில் தட்டச்சிட்டு வன்படியாகவும் (அச்சிட்ட தாள் வடிவிலும்), மென்படியாகவும் (குறுந்தட்டில் பதிந்தோ, மின்னஞ்சல் வழியாகவோ) அனுப்ப வேண்டும்.
·         
               பேராளர்ப் பதிவுக்கட்டணம் ரூ. 300-க்கான வரைவோலையை முனைவர் சி. பத்மாசனி    (s. padmasani, Puducherry)) என்ற பெயருக்கு எடுத்துப் புதுச்சேரியில் மாற்றத்தக்கதாக அனுப்பவேண்டும். பதிவுப் படிவம், வரைவோலை அனுப்ப கடைசிநாள் : 26.12.12.

·                     கட்டுரைகள் கருத்தரங்க நாளன்று ஐ.எசு.பி.என். எண் ணுடன் கருத்தரங்கத் தொகுதி களாக வெளியிடப்பெறும். பேராளர்களுக்கு நண்பகல் உணவும், தங்குமிடமும் சான்றிதழும் வழங்கப்பெறும்.

·                              தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரையாளர்களுக்குப் பயணப்படி வழங்கப்பெறும்.

·                              கட்டுரையும் வரைவோலையும் அனுப்பக் கடைசி நாள் : 05.01.13.

·                             கட்டுரை, வரைவோலை அனுப்பவேண்டிய முகவரி:

                              முனைவர் ஆ. மணி,
                     கருத்தரங்க ஒருங்கிணைப்பு இணைச்செயலர்,
                     மனை எண் 56, நான்காம் குறுக்குத் தெரு,
                     அமைதி நகர்,
                     அய்யங்குட்டிப் பாளையம்,
                      புதுச்சேரி – 605 009,
                      பேசி: 94439 27141, 78716 29365,
                     மின்னஞ்சல் : manikurunthogai@gmail.com

                               கருத்தரங்க அழைப்பு மடல் - 1

  கருத்தரங்க அழைப்பு மடல் - 2



ஞாயிறு, 11 நவம்பர், 2012

தவறான மின்னஞ்சல்கள்

அன்புடையீர்,


       வணக்கம். நான் முன்னொரு காலத்தில் பயன்படுத்திய  manikuruthogai@yahoo.co.in என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து தவறான பல செய்திகள் நண்பர்களுக்கு அனுப்படுவதாக அறிந்தேன். அந்தக் கணக்கைத் தடை செய்ய முயன்றும் முடியவில்லை. பாஸ்வேர்ட் மாற்றப்பட்டுள்ளது. எனவே அந்த மின்னஞ்சல் முகவரியிலிருந்து ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் அதை நீக்கிவிடுக. பார்க்கவேண்டாம். எனக் கேட்டுக் கொள்கின்றேன். என்னால் ஏற்பட்ட இந்த தொல்லைக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...