புதன், 19 டிசம்பர், 2012

உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரிப் பட்டமளிப்பு விழா

       புதுச்சேரி, திருக்கனூரில் இயங்கி வரும்  உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரியின் ஏழாம் பட்டமளிப்பு விழா 02.11.2012 அன்று நடைபெற்றது. புதுச்சேரி ஊரகப் பகுதி மாணவர்களின் கல்விக்காக எஸ்.எம்.ஜி. அஞ்சலை அம்மாள் கல்வி அறக்கட்டளை என்ற பெயரிய அமைப்பொன்றினை நிறுவி, அதன்மூலம் மேல்நிலைப்பள்ளி, கல்வியல் கல்லூரி ஆகியவற்றை மிகச் சிறப்பாக நடத்திவரும் கல்வியாளர்; போற்றுதலுக்குரிய முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள் விழாவிற்குத் தலைமையேற்று உரையாற்றினார்.  100 மாணவர்கள் இளநிலைக் கல்வியியல் பட்டம்பெற்ற அவ்விழாவில் மத்திய எண்ணைவித்துக் கழகச் செயல் இயக்குநர் முனைவர் பரமாத்மா அவர்கள் மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார். தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் ஆ.மணி வாழ்த்துரையாற்றினார். கல்வி நிறுவனங்களைச் சிறப்பாக நடத்துவதற்குப் பின்புலமாக விளங்குகின்ற  துணை முதல்வர் பேரா. உஷாஇலட்சுமணன் அவர்கள் விழாவை ஒருங்கிணைத்து நடத்தினார். இவ்விழா பற்றிப் புதுவை பூமி இதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு இது. 




கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...