சனி, 22 டிசம்பர், 2012

உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரிப் பயிலரங்கு - 2

புதுச்சேரி, திருக்கனூரில் இயங்கி வரும் உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரியில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கையில் நடைபெற்ற பத்துநாள் பயிலரங்கின் தொடக்கவிழா 12.12.12 அன்று முற்பகல் 9.30 மணியளவில் நடைபெற்றது.

   விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் முனைவர் க. இராமசாமி ஐயா அவர்கள் பங்கேற்றுத் தொடக்கவிழாப் பேருரையாற்றினார்.  விழாவிற்குக் கல்லூரித் தாளாளர் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார்.  புதுவைப் பல்கலைக் கழகத் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் அ.அறிவுநம்பி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.  பயிலரங்கத்தின் நோக்கம் பற்றிய கருத்துக்களை முனைவர் ஆ.மணி எடுத்துரைத்தார்.  உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரித் தமிழ்த்துறைத் துணைப்பேராசிரியர் பா.இலதா வரவேற்புரை ஆற்றினார். உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரியின்  வணிகவியல்துறைத் தலைவர் ஆர். திருமாவளவன் நன்றி நவின்றார். விழாக் காட்சிகள் இவை:


 விளக்கேற்றும் நிகழ்ச்சி

முனைவர் ஆ.மணி அவர்களுக்குக் கல்லூரித் தாளாளர் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள் சிறப்புச் செய்தல். 

முனைவர் ஆ.மணி பயிலரங்க நோக்கவுரையாற்றுதல்.

 செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் முனைவர் க. இராமசாமி ஐயா அவர்கள் தொடக்கவிழாப் பேருரையாற்றுதல்.


புதுவைப் பல்கலைக் கழகத் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் அ.அறிவுநம்பி அவர்கள் வாழ்த்துரை வழங்குதல்.


 உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரியின்  வணிகவியல்துறைத் தலைவர் ஆர். திருமாவளவன் அவர்கள் நன்றியுரையாற்றல். 





கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...