செவ்வாய், 5 மார்ச், 2013

அண்ணாமலைப் பல்கலைக் கழகக் கருத்தரங்கு - 10.01.13

      செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழியல்துறை இளம்பூரணர், சேனவரையர் உரைமரபுகள் என்னும் பெயரிய மூன்று நாள் கருத்தரங்கினை 2013 சனவரி 9,10,11 ஆகிய நாட்களில் நடத்தியது. புலமுதன்மையர் முனைவர் பழ. முத்துவீரப்பன் ஐயா அவர்களின் சீரிய வழிகாட்டலில் தமிழியல்துறைப் பேராசிரியர் முனைவர் ப. ஞானம் அம்மா அவர்கள் கருத்தரங்கினை ஒருங்கிணைத்து நடத்தினார். அக்கருத்தரங்கில் இளம்பூரணர் உரைநெறிகள் தொடர்பான உரையாற்றும் வாய்ப்புத் திடீரென வாய்த்தது. வாய்ப்பினை வழங்கிய புலமுதன்மையர் முனைவர் பழ. முத்துவீரப்பன் ஐயா அவர்களுக்கும், தமிழியல்துறைப் பேராசிரியர் முனைவர் ப. ஞானம் அம்மா அவர்களுக்கும், நண்பர் முனைவர் ரெ. முத்துராசன் அவர்களுக்கும், துறைப் பேராசிரியர்களுக்கும் என் நன்றி. கருத்தரங்கக் காட்சிகள் இவை:

கருத்தரங்கப் பதாகை
 முனைவர் ஆ. மணி அவர்களின் உரை : இளம்பூரணர் உரைநெறிகள்.
அரங்கச் சுவைஞர் பகுதியில் பெரும்பேராசிரியர் முனைவர் செ.வை. சண்முகம் அவர்களும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் ப. ஞானம் அவர்களும்.
 பல்கலைக் கழகத் தமிப் பேராசிரியர்கள். மையத்தில் முனைவர் ரெ. முத்துராசன் அவர்கள்.
அரங்கச் சுவைஞர்

அரங்கு: சேய்மைக் காட்சி.


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...