திங்கள், 4 மார்ச், 2013

புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனப் பயிலரங்கு 03.01.13

     புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கைப் பெற்றுச் செம்மொழித் தமிழும் சிலப்பதிகாரமும் என்னும் பெயரிய பத்துநாள் பயிலரங்கு ஒன்றினை 03.01.2013 முதல் 12.01.2013 வரை நடத்தியது. முனைவர் சிலம்பு நா. செல்வராசு அவர்கள் ஒருங்கிணைத்து நடத்திய அப்பயிலரங்கில் 03.01.2013 அன்று நடைபெற்ற முதல் அமர்வில் சிலப்பதிகாரக் கருத்தியல் மீளாய்வு என்ற தலைப்பில் பயிலரங்க உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. எதையும் மிகச் சரியாகச் செய்ய வேண்டும் ,  தக்காரையே உரையாற்ற அழைக்க வேண்டும் என்ற கொள்கையில் தளராத புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர்  முனைவர் பக்தவத்சல பாரதி அவர்களுக்கும், ஒருங்கிணைப்பாளர்  முனைவர் சிலம்பு நா. செல்வராசு அவர்களுக்கும், முனைவர் இரா. சம்பத் அவர்களுக்கும்  என் நன்றி மலர்கள். அப்பயிலரங்கின் காட்சிகள் இப்படங்கள்.

 அறிமுகவுரையாற்றுகின்றார் பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சிலம்பு நா. செல்வராசு அவர்கள்
 முனைவர் ஆ. மணி அவர்களின் பயிலரங்க உரை: சிலப்பதிகாரக் கருத்தியல் மீளாய்வு 
முனைவர் ஆ. மணி அவர்களின் பயிலரங்க உரை: சிலப்பதிகாரக் கருத்தியல் மீளாய்வு  (அண்மைக் காட்சி)
 பயிலரங்கச் சுவைஞர்
 பயிலரங்கச் சுவைஞர் பகுதியில் முனைவர் து. சீனிச்சாமி அவர்களின் அருகில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் என். சண்முகலிங்கன் அவர்கள்.  
 விழா அரங்கின் புறத்தே வைக்கப்பட்டிருந்த மாதவி சிலையோவியம்
விழா அரங்கின் புறத்தே வைக்கப்பட்டிருந்த கோவலன், கண்ணகி, மாதவி சிலையோவியங்கள்

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...