சனி, 9 மார்ச், 2013

தாகூர் கலைக்கல்லூரி ஆய்வுத்திட்டக் கருத்தரங்கு - 25.02.13.

         புதுச்சேரித் தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறையில் பழந்தமிழ் உரைகள் பற்றிய கருத்தரங்கு 25.02.13 திங்கட்கிழமை நடைபெற்றது. தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் ஆ. மணி அவர்கள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கை பெற்று பழந்தமிழ் இலக்கண, இலக்கிய உரைகளில் குறுந்தொகை என்னும் பெயரில் ஆய்வுத்திட்டம் ஒன்றை நிகழ்த்தி வருகின்றார். அத்திட்டத்தின் சார்பாகத் தாகூர் கலைக்கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக ஆய்வுத்திட்டக் கருத்தரங்கு நடைபெற்றது.

     காலை பத்து மணிக்குத் தொடங்கிய இவ்விழாவுக்குக் கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு. இராசன் அவர்கள் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: மூன்று வாரங்களுக்கு முன்னர் இருநாள் தேசியக்கருத்தரங்கினை நடத்தி புதிய வரலாற்றுத் தடத்தினைப் பதித்த தமிழ்த்துறையினர், இப்போது மற்றொரு கருத்தரங்கினை நடத்துவது மகிழ்ச்சிக்குரியது. இளநிலை மாணவர்களுக்கும் ஆராய்ச்சியின் அடிப்படைகளும், பயன்பாடும் சென்று சேருவது இன்றியமையாதது. மதிப்பெண்ணை நோக்கிய கல்வி என்பதிலிருந்து மாணவர்களை ஆராய்ச்சியை நோக்கி நகர்த்துவதற்குத் தமிழ்த்துறையினர் செயல்படுவது பாராட்டுதலுக்குரியது என்றார்.


  தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழக முன்னைத் துணைவேந்தரும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதுநிலை ஆய்வறிஞருமாகிய முனைவர் இ.சுந்தரமூர்த்தி அவர்கள் கருத்தரங்கினைத் தொடக்கி வைத்துப் பேருரை நிகழ்த்தினார். 

  பேராசிரியர்  கு.சிவமணி அவர்கள் கருத்தரங்க மையவுரை யாற்றினார்.தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி. பத்மாசனி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். முனைவர் கு.ஞானகுரு நன்றி நவின்றார்.


    பிற்பகல் நடைபெற்ற இலக்கண உரைகள் அமர்வுக்குப் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் பக்தவத்சல பாரதி அவர்கள் தலைமையேற்றார். முனைவர் தி.செல்வம்  அவர்கள் இளம்பூரணர் தொல்காப்பிய உரையில் தன் அகப்பொருள் கருத்தை நிறுவ முயலும் தன்மை என்ற தலைப்பிலும், முனைவர் இரா. சம்பத் அவர்கள் செவ்வியல் இலக்கிய ஆக்க மரபும் உரைமரபும் என்ற தலைப்பிலும், முனைவர் அ. செந்தில் நாராயணன் அவர்கள் தொல்காப்பிய உரைகளின் அமைப்பியல் என்ற தலைப்பிலும் உரையாற்றினர். 


      இலக்கிய உரைகள் அமர்வுக்குப் பட்ட மேற்படிப்பு மையத்தின் இணைப்பேராசிரியர் முனைவர் சி. சத்தியசீலன் அவர்கள் தலைமை ஏற்றார். முனைவர் சு.அ. வெங்கட சுப்பராய நாயகர் அவர்கள் மூலநூலைப் புரிந்து கொள்வதில் உரைகளின் பங்கு என்ற தலைப்பிலும் முனைவர் ஆ. மணி அவர்கள் உரை மேற்கோள்கள்: நோக்கமும் நெறிகளும் பயன்பாடும் என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.


    கருத்தரங்க ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆ. மணி, முனைவர் கு.ஞானகுரு  மற்றும்  மாணவர்கள் செய்திருந்தனர்.

அழைப்பிதழ் - 1
அழைப்பிதழ் - 2

அழைப்பிதழ் - 1:1

அழைப்பிதழ் - 2:2
கருத்தரங்கப் புறப் பதாகை
கருத்தரங்க அகப் பதாகை

மாணவியரின் கைவண்ணம் 
 
மாணவியரின் கைவண்ணம் 
முனைவர் இ. சுந்தரமூர்த்தி  அவர்களுக்கு கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு.இராசன் அவர்கள் நினைவுப் பரிசு வழங்குதல்.
பேராசிரியர் கு. சிவமணி  அவர்களுக்கு கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு.இராசன் அவர்கள் நினைவுப் பரிசு வழங்குதல்.
கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு. இராசன் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்குகின்றார் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி. பத்மாசனி அவர்கள்.
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி. பத்மாசனி அவர்களுக்குத் தமிழ் இணைப் பேராசிரியர் முனைவர் தி.செல்வம் அவர்கள் நினைவுப் பரிசு வழங்குதல்
 கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு.இராசன் அவர்கள் தலைமையுரை வழங்குதல்.
முனைவர் இ. சுந்தரமூர்த்தி அவர்களின் கருத்தரங்கத் தொடக்கப்பேருரை.
பேராசிரியர் கு. சிவமணி அவர்களின் மையவுரை.
தமிழ்த்துறை தலைவர் முனைவர் சி. பத்மாசனி அவர்களின் வாழ்த்துரை.
முனைவர் கு. ஞானகுரு அவர்களின் நன்றியுரை.
கருத்தரங்கப் பயனாளர் பகுதியில் முனைவர் சு.ஆ.வெங்கட சுப்பராய நாயகர், முனைவர் இரா. சம்பத், முனைவர் பக்த வத்சல பாரதி ஆகியோர்.
கருத்தரங்கப் பயனாளர் பகுதியில் முனைவர் தி. தாமரைச்செல்வி,  
முனைவர் ந. இராணி ஆகியோர்.
உணவரங்கம்
உணவரங்கம்
உணவரங்கம்
உணவரங்கம்
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் பக்த வத்சல பாரதி அவர்களின் அமர்வுத் தலைமையுரை
தாகூர் கலைக்கல்லூரித் தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர் தி. செல்வம் அவர்களின் உரை: இளம்பூரணர் தொல்காப்பிய உரையில் தன் அகப்பொருள் கருத்தை நிறுவ முயலும் தன்மை
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின்  இணைப் பேராசிரியர் முனைவர் இரா. சம்பத் அவர்களின் உரை: செவ்வியல் இலக்கிய ஆக்க மரபும் உரைமரபும்
புதுச்சேரி பிரஞ்சு ஆய்வு நிறுவனத்தின் முனைவர்ப் பட்ட மேலாய்வாளர் முனைவர் அ. செந்தில் நாராயணன் அவர்களின் உரை: தொல்காப்பிய உரைகளின் அமைப்பியல். 
கா.மா. பட்ட மேற்படிப்பு மையத்தின் தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர் சி. சத்திய சீலன் அவர்களின் அமர்வுத் தலைமையுரை.
கா.மா. பட்ட மேற்படிப்பு மையத்தின் பிரெஞ்சு இணைப்பேராசிரியர் முனைவர் சு.ஆ. வெங்கட் சுப்பராய நாயகர் அவர்களின் உரை: மூலநூல்களைப் புரிந்து கொள்வதில் உரைகளின் பங்கு.
கருத்தரங்கு & ஆய்வுத்திட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆ.மணி அவர்களின் உரை: மேற்கோள் நெறிகளும் வகைகளும் பயன்பாடும்.
கருத்தரங்கப் பயனாளர் பகுதியில் முனைவர் நா. வஜ்ரவேலு அவர்கள்.
கருத்தரங்கப் பயனாளர்களுக்குக் கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எமு. இராசன் அவர்கள் சான்றிதழ் வழங்குதல்.

கருத்தரங்கப் பயனாளர்களுக்குக் கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எமு. இராசன் அவர்கள் சான்றிதழ் வழங்குதல்.
கருத்தரங்கப் பயனாளர் பகுதியில் முனைவர் ஆ. மணி, முனைவர் கு. ஞானகுரு, முனைவர் ழான் லூய்க் செவியார் ஆகியோர். 
கருத்தரங்கப் பயனாளர்கள்


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...