சனி, 7 நவம்பர், 2015

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 11) காற்று

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 11) காற்று
காற்று
            பெரும் பொழுதுகளில் வீசும் காற்றுக்களில் சில வகையுண்டு. தென் திசையில் இருந்து வரும் காற்றைத் தென்றல் என்பர். தென்றல் என்ற சொல் இந்நூலில் வாராவிடினும் அசைவளி என்னும் பெயரால் அது குறிக்கப்படுகின்றது. மெல்லென நடத்தலை அசைதல் என்பர். மெல்லென வருவதாதலின் தென்றல் அப்பெயரை உடையதாயிற்று. இக் காரணத்தாலேயே வடமொழியில் அதற்கு மந்தமாருதம் என்னும் பெயர் அமைந்தது. இக்காற்றை இளவேனிற்குரியதாகக் கூறுவர்.
            சூறைக் காற்றைக் கடுவளி என்பர்; இது சுழற்றி அடிக்கும் தன்மையுடையது; முதுவேனிலிற் பாலை நிலத்தில் இது வீசுவதைச் சில புலவர்கள் பாடுகின்றனர். கீழ்க்காற்று, கொண்டல் எனப்படும். மேல் காற்று கோடை எனப்படும். இது வெம்மை உடையது. வடகாற்று வாடை எனப்படும். இது பெரும்பாலும் கூதிர்க் காலத்திலும் சிறுபான்மை பனிக்காலத்திலும் வீசுவது; குளிர் மிகுதியாக உடையது; ஊதையெனவும் சொல்லப்படும்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...