சனி, 7 நவம்பர், 2015

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 11) மரம், செடி, கொடி: அகில்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 11) மரம்செடிகொடி: அகில்

மரம், செடி, கொடி
            நிலமும் காலமுமாகிய முதற்பொருளமைந்த ஐவகைத் திணைகளில் உள்ள கருப்பொருள்கள் பல. அவற்றுள் மரம், செடி, கொடி, விலங்கு, பறவை ஆகியவற்றைப் பற்றிய அரிய செய்திகளைப் புலவர்கள் உணர்ந்து வெளியிடுகின்றனர். இவை இன்ன இன்ன திணைக்குரியன என்ற வரையறை இருப்பினும் இவை தம்முள் கலந்து இருத்தலும் உண்டு. அதனைத் திணை மயக்கம் என்பர்.
  எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் 
   அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும் 
   வந்த நிலத்தின் பயத்த வாகும்         (தொல். அகத். 19)    
என்பது இம் மயக்கத்திற்குரிய இலக்கணமாகும். இந்நூலுள் வந்த இப்பொருள்களைப் பற்றிய செய்திகள் வருமாறு:-
அகில்
    குறிஞ்சி நிலத்தில் உண்டாகும் அகிலைக் கானவர் மற்ற மரங்களோடு வெட்டி எரித்துப் பின் தினையை விதைப்பர்; அவ்வகிலின் புகை வெண்ணிறமாக நீர்த்துளியற்ற மேகத்தைப் போல மேலே எழும். மகளிர் நீராடிய பின்னர் தம் கூந்தலுக்கு அகிற் புகையை ஊட்டிப் புலர்த்துவர்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...