வெள்ளி, 13 செப்டம்பர், 2013

தாகூர் கலைக்கல்லூரிப் பாராட்டுவிழா (12.09.13)

   தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறையில் நேற்று (12.09.2013) பிற்பகல் 2மணியளவில் இளங்கலைத் தமிழில் உயர்மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முனைவர் ஆரா. சிவகுமாரன் அறக்கட்டளைப் பரிசளிப்பும், இளந்தமிழறிஞர் விருது பெற்ற முனைவர் ஆ.மணிக்குப் பாராட்டு விழாவும் நடைபெற்றன. 
    தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய அவ்விழாவில் தமிழ்ப்பேரவையின் பொறுப்பாளர் முனைவர் தி. செல்வம் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து தமிழ்த்துறையின் தலைவர் முனைவர் சி. பத்மாசனி அவர்கள் தலைமையுரையாற்றினார். அவர் தன்னுடைய பேச்சில் தாகூர் கலைக்கல்லூரியின் முன்னாள் மாணவரும் தற்போது சிங்கப்பூர் நன்யாங் பல்கலைக் கழகத்தில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி வருபவருமாகிய முனைவர் ஆ. இரா. சிவகுமாரன் அவர்கள், நம்முடைய தமிழ் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் பரிசு வங்கி வருவதற்கு நன்றி தெரிவித்தார். மேலும், முனைவர் ஆ. மணியின் ஆய்வுப்பணிகளையும் தமிழ்ப்பணிகளையும் மதிப்பிட்டுக் காட்டி மணி அவர்களுக்குக் குடியரசுத்தலைவரின் இளந்தமிழறிஞர் விருது கிடைத்திருப்பது பொருத்தமுடையதே என்றும் , மாணவர்கள் அவரை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
    விழாவுக்கு முன்னிலை வகித்த கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு. இராசன் அவர்கள்,  மணி அவர்கள் குடியரசுத்தலைவர் வழங்கும் இளந்தமிழறிஞர் விருதினைப் பெற்றதன் மூலம் தாகூர் கலைக்கல்லூரிக்கும் புதுவைக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்றும், தமிழ்த்துறை பலநிலைகளிலும் சாதனை புரிந்து வருவது மகிழ்ச்சி அளிக்கின்றது என்றும் வாழ்த்துரை வழங்கினார். மேலும் உயர்மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மாணவர்கள் எல்லா நிலைகளிலும் சாதனை படைத்து கல்லூரிக்குப் பெருமைதேடித் தருவதோடு, வாழ்க்கையிலும் வெற்றி பெறவேண்டும் என வாழ்த்தினார்.
             முனைவர் ஆ.இரா. சிவகுமாரன் அறக்கட்டளைப் பரிகளை வழங்கிய திரு. கமலக்கண்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கியதோடு மணி அவர்களுக்கு ஆடை அணிவித்து வாழ்த்தினார்.
              விழாவில் கலந்துகொண்ட புதுச்சேரி, இந்திராகாந்தி கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சிவ. மாதவன் அவர்கள், மணி அவர்களை வாழ்த்திப் பொன்னாடை அணிவித்தார். தாகூர் கலைக்கல்லூரியின் பொருளாதாரத்துறையின் தலைவர் முனைவர் சிவக்குமார் அவர்கள் தலைமையில் துறைப் பேராசிரியர்கள் வந்திருந்து மணி அவர்களுக்கு ஆடை அணிவித்து வாழ்த்தினர்.
               முனைவர் ஆ. மணி அவர்களுக்குப் பாராட்டுரை வழங்கிய முனைவர் தி. செல்வம் அவர்கள், மணி நுட்பமான உண்மைகளை வெளிப்படுத்தி வரும் ஆய்வாளர் எனச் சான்றுரைத்தார். வாழ்த்துரை வழங்கிய முனைவர் ப. கொழந்தசாமி அவர்கள் மணி உழைப்புத் தேனீ எனப் பாராட்டினார்.
         உயர்மதிப்பெண் பெற்றுப் பரிசு பெற்ற மாணவர்கள் தே. கமலபாலன், செ. சிலம்பரசி ஆகியோர் ஏற்புரையாற்றினர். முனைவர் ஆ.மணி மிகச் சிறந்த பேராசிரியர் என மதிப்பிட்டுரைத்தனர். 
       பாராட்டுதல்களை ஏற்றுக் கொண்டு ஏற்புரையாற்றிய முனைவர் ஆ.மணி, தன்னுடை ஆய்வுப் பணிகளுக்குப் பெரிதும் துணைநின்று, அறிவார்ந்த வழிகாட்டியாகத் திகழும் கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு.இராசன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். பாராட்டுவிழாவிற்கு ஏற்பாடு செய்த தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் சி. பத்மாசனி அவர்களுக்கும், தமிழ்ப்பேரவை ஒருங்கிணைப்பாளர் முனைவர் தி. செல்வம் அவர்களுக்கும், தமிழ்த்துறை, பொருளாதாரத்துரைப் பேராசிரியர்களுக்கும், பாராட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
       மூன்றாமாண்டு மாணவி உஷா நன்றி நவின்றார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி. பத்மாசனி அவர்களின் கணவரும், தமிழ்நாடு முதலமைச்சரின் காவலருமாக இருந்து ஓய்வுபெற்ற திரு. ஸ்ரீதரன் அவர்கள் மணி அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது. அவ்விழாவின் காட்சிகள் இதோ:

  மாணவியர் கைவண்ணம்
மாணவியர் கைவண்ணம்
 வரவேற்புக் குழுவினர்
 கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு. இராசன் அவர்கள் விளக்கேற்றல்.
  கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு. இராசன் அவர்கள் முனைவர் ஆ. மணிக்கு ஆடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்குகின்றார்.
 இந்திராகாந்தி கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சிவ. மாதவன் அவர்கள், முனைவர் ஆ. மணிக்கு ஆடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்குகின்றார்.
 திரு. கமலக்கண்ணன் அவர்களுக்கு முனைவர் நா. இளங்கோ அவர்கள் ஆடை அணிவித்துச் சிறப்புச் செய்கின்றார்.
 தமிழ்த்துறைத் தலைவர் சி. பத்மாசனி அவர்களின் தலைமையுரை.
 கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு. இராசன் அவர்கள், மாணவர் தே.கமலபாலன் அவர்களுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டுகின்றார்.
 கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு. இராசன் அவர்கள், மாணவி செ. சிலம்பரசி அவர்களுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டுகின்றார்.
கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு. இராசன் அவர்களின் முன்னிலையுரை.
திரு. கமலக்கண்ணன் அவர்களின் வாழ்த்துரை
 முனைவர் தி. செல்வம் அவர்களின் பாராட்டுரை.
 முனைவர் ப. கொழந்தசாமி அவர்களின் பாராட்டுரை. 
முனைவர் சிவக்குமார் அவர்கள் மணிக்கு ஆடை அணிவித்து வாழ்த்துகின்றார்.
தமிழ்த்துறை மாணவர்கள் பூங்கொத்துக் கொடுத்துப் பாராட்டுகின்றனர்.
 திரு. தே. கமலபாலன் அவர்களின் ஏற்புரை. 
 செல்வி. செ. சிலம்பரசி அவர்களின் ஏற்புரை.
 முனைவர் ஆ.மணி அவர்களின் ஏற்புரை.
முனைவர் சு. தில்லைவனம், திரு. கமலக்கண்ணன், முனைவர் சி.பத்மாசனி, முனைவர் சுதர்சனம், முனைவர் நா. இளங்கோ, முனைவர் தி. செல்வம் ஆகியோருடன் முனைவர் ஆ.மணி. 
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி. பத்மாசனி அவர்களின் கணவரும், தமிழ்நாடு முதலமைச்சரின் காவலராக இருந்து ஓய்வுபெற்றவருமாகிய திரு. ஸ்ரீதரன் அவர்கள், மணி அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டுகின்றார்.


        
              

1 கருத்து:

காயத்ரி வைத்தியநாதன் சொன்னது…

விருதுபெற்ற முனைவர் திரு.மணி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும். தங்களது தமிழ்ச்சேவை தொடர தமிழன்னை அருளட்டும்.

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...