ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

திசையன்விளை, ம.சு. பல்கலைக் கழகக் கல்லூரிக் கருத்தரங்கு (08 - 10. 01. 14)

      திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இயங்கிவரும் திசையன்விளை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகக் கல்லூரியின் தமிழ்த்துறை, சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் ‘ பிற்காலப் பொருளிலக்கண நூல்களில் தொல்காப்பியப் பொருளதிகார மரபும் மரபு மீறலும்’ என்னும் பொருண்மையில் மூன்று நாள் கருத்தரங்கு (08 - 10 . 01. 14) நிகழ்த்தியது. புதியன செய்யும் ஆர்வமும் தமிழன்பும் கொண்ட முனைவர் கோ. முத்துராசு அவர்கள் இக்கருத்தரங்கினை ஒருங்கிணைத்து நடத்தினார். சீரும் சிறப்புமாக நடைபெற்ற அக்கருத்தரங்கில் பங்கேற்கும் வாய்ப்பும், தொல்காப்பியமும் இறையனார் அகப்பொருளும் என்னும் பொருளில் உரையாற்றும் சூழலும் முனைவர் கோ. முத்துராசு அவர்களால் வாய்த்தன. நல்லாய்வுத் திறமும் புலமையும் வாய்ந்த மூத்த அறிஞர் பெருமக்களும், குடியரசுத் தலைவரின் இளந்தமிழறிஞர் விருது பெற்ற அறிஞர்களும் பங்கேற்ற அக்கருத்தரங்கக் காட்சிகள் இவை. சில படங்கள் கிட்டாமையால் வெளியிட இயலவில்லை.


 கருத்தரங்க அழைப்பிதழ் முன்பக்கம்
கருத்தரங்க அழைப்பிதழ் பின்பக்கம்

 தொடக்கவிழா மேடையில் அறிஞர்கள்
 வரவேற்புரை : முனைவர் கோ. முத்துராசு அவர்கள்
  தலைமையுரை : கல்லூரி முதல்வர் முனைவர் ம. ஜோசப் இருதய சேவியர் அவர்கள்
வாழ்த்துரை : முனைவர் அ. இராமசாமி அவர்கள் (ஒருங்கிணைப்பாளர், ம.சு.ப. கல்லூரிகள்).
 தொடக்கப்பேருரை : முனைவர் ச. வே. சுப்பிரமணியன் அவர்கள் (மேனாள் இயக்குநர், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்). 
 முனைவர் தி. முத்து இலக்குமி அவர்களின் உரை : இறையனாரில் தோழி.
 முனைவர் சி. சிதம்பரம் அவர்களின் உரை: தொல்காப்பியமும் தமிழ்நெறி விளக்கமும்
 முனைவர் பெ. சுயம்பு அவர்களின் உரை : பொருளிலக்கணம் - பிற்கால வளர்ச்சி
 முனைவர் ப. மருதநாயகம் அவர்களின் உரை : தொல்காப்பியமும் இறையனார் களவியலும்
முனைவர் சு. சந்திரா அவர்களின் உரை : தொல்காப்பியமும் சுவாமிநாதமும்.

முனைவர் அ. செல்வராசு அவர்களின் உரை : தொல்காப்பியமும் இலக்கண விளக்கமும்


முனைவர் தி. செல்வம் அவர்களின் உரை : தொல்காப்பியமும் வீரசோழியமும்

 முனைவர் க. சுந்தர பாண்டியன் அவர்களின் உரை : தொல்காப்பியமும் மாறனகப்பொருளும்
 முனைவர் கு. சிவமணி அவர்களின் உரை : தொல்காப்பியமும் புறப்பொருள் வெண்பாமாலையும்
 முனைவர் சிவ. மாதவன் அவர்களின் உரை : தொல்காப்பியமும் பிற்கால அணியியல் நூல்களும்
முனைவர் இரா. சம்பத் அவர்களின் உரை : தொல்காப்பியமும் காக்கைபாடினியமும்

 முனைவர் உ. அலிபாவா அவர்களின் உரை : தொல்காப்பியமும் நம்பியகப் பொருளும்
 பேராசிரியர் கு. சிவமணி அவர்களின் நிறைவுப்பேருரை
 முனைவர் கோ. முத்துராசு அவர்களின் நன்றியுரை
 பங்கேற்பாளர் சான்றிதழ் வழங்குகின்றார் பேராசிரியர் கு. சிவமணி அவர்கள்
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோ. முத்துராசு அவர்களுக்கு ஆடை அணிவித்துப் பாராட்டுகின்றார் பேராசிரியர் கு. சிவமணி அவர்கள் 

கருத்தரங்கப் பின்புல உதவிகள் செய்த முனைவர் ஆ. மணி அவர்களுக்கு ஆடை அணிவித்துப் பாராட்டுகின்றார் பேராசிரியர் கு. சிவமணி அவர்கள் 


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...