சனி, 1 பிப்ரவரி, 2014

சாத்தூர், இராமசாமி நினைவுக் கல்லூரிக் கருத்தரங்கு (23.12.13)



சாத்தூர் ஏழாயிரம் பண்ணைச்சாலையில் உள்ள இராமசாமி நினைவுக் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் இயங்கி வரும் முத்தமிழ் மன்றத்தின் சார்பாகக் கல்லூரியின் நிதிக்கொடையில் சங்க இலக்கியக் கற்றல் என்னும் கருத்தரங்கு 23.12.13 (திங்கட்கிழமை) அன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்றது. விழாவிற்குத் தமிழன்பு சான்ற கல்லூரி முதல்வர் முனைவர் இராதா கிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கினார். கருத்தரங்கிற்கு அமைதியே வடிவாகவும், எழுச்சியே திருவாகவும் கொண்ட தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இராமநாதன் அவர்கள் பொறுப்பேற்றார். அன்புள்ளம் கொண்ட மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் வே. தனுஜா அவர்கள் கருத்தரங்க நிகழ்வுகளை ஒருங்கிணைப்பு செய்தார். அறிவுத்தேடலும் தாகமும் கொண்ட முனைவர் மூ. கவிதா அவர்கள் ஒருங்கிணைப்பாளருக்குத் துணையாக இருந்து பணிகளை இணைத்துத் தந்தார். மேலும், கருத்தரங்கச் சிறப்பு விருந்தினர் அறிமுக உரையும் ஆற்றினார். அக்கருத்தரங்கில் முனைவர் ஆ. மணி அவர்கள் சங்க இலக்கியம் கற்றல் என்னும் தலைப்பில் உரையாற்றினார். விழாவில் மொழிப்பாடமாகத் தமிழ் பயிலும் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியரும் பேராசிரியர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளைத் தமிழ்த்துறையினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.  கருத்தரங்க உரைக் காட்சிகள் இவை.

 விழா மேடையில் கல்லூரி முதல்வர் முனைவர் இராதாகிருஷ்ணன் அவர்கள், முனைவர் ஆ. மணி, தமிழ்த்துறைத் தலைவர் இராமநாதன் அவர்கள் ஆகியோர்.
 மாணவியரின் இறைவணக்கம்.

விழாத்தலைமையுரை : கல்லூரி முதல்வர் முனைவர் இராதாகிருஷ்ணன் அவர்கள்.

 கருத்தரங்கத் தலைமையுரை : துறைத்தலைவர் முனைவர் இராமநாதன் அவர்கள்.

 
 கல்லூரி முதல்வர் முனைவர் ஆ. மணி அவர்களுக்குச் சிறப்புச் செய்தல்.
 அறிமுக உரை : முனைவர் மூ. கவிதா அவர்கள்.
 முனைவர் ஆ. மணி அவர்களின் கருத்தரங்க உரை : சங்க இலக்கியம் கற்றல்.
 கருத்தரங்கில் பங்கேற்றோர்.
 கருத்தரங்கில் பங்கேற்றோர்.
 நன்றியுரை: தமிழ்த்துறைப் பேராசிரியர்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...