ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசுக் கலைக்கல்லூரிப் பயிலரங்கு (6,7.01.14)

  சிவகங்கை, மன்னர் துரைசிங்கம் அரசுக் கலைக்கல்லூரித் தமிழ்த்துறை சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையுடன் செம்மொழி இலக்கியங்கள் கற்றல்; கற்பித்தல்; ஆராய்தல் என்னும் தலைப்பில் பத்து நாள் (202.01.14 - 11.01.14) பயிலரங்கினை நடத்தியது. பயிலரங்கினைப் பேராசிரியரும் என் வாழ்விலும் வளர்ச்சியிலும் பெரிதும் அக்கறை கொண்டவருமாகிய முனைவர் ச. இராமமூர்த்தி அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார். அப்பயிலரங்கில் தொல்காப்பிய அகத்திணை மரபுகளும் குறுந்தொகையும், ஆய்வுநோக்கில் குறுந்தொகைப் பதிப்பு வரலாறு ஆகிய தலைப்புக்களில் உரையாற்றும் வாய்ப்பினை வழங்கியதோடு, அறிமுகவுரையும் ஆற்றினார்  முனைவர் ச. இராமமூர்த்தி.  கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பழனியப்பன் அவர்கள் தலைமையில் அவ்வுரைகளை ஆற்றும் வாய்ப்பு அமைந்தது. பயிலரங்க உரைக்காட்சி இதோ.
சிவகங்கை மன்னர் அரண்மனையைக் காணும் வாய்ப்பும் அங்குக் கிடைத்தது. அப்படங்களும் இவண் தரப்பட்டுள்ளன.

 பயிலரங்க அழைப்பிதழ் முன்பக்கம்
பயிலரங்க அழைப்பிதழ் பின்பக்கம்
 முனைவர் ஆ. மணி அவர்களின் பயிலரங்க உரை : தொல்காப்பிய அகத்திணை மரபுகளும் குறுந்தொகையும். மேடையில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பழனியப்பன் அவர்கள். 
  முனைவர் ஆ. மணி அவர்களின் பயிலரங்க உரை : ஆய்வுநோக்கில் குறுந்தொகைப் பதிப்பு வரலாறு
 அரண்மனை நுழைவாயிலின் முன்னர் உள்ள அரசி வேலு நாச்சியார் பற்றிய குறிப்புக்கள்.
அரண்மனை நுழைவாயிலின் முன்னர் உள்ள அரசி வேலு நாச்சியார் சிலை.

 சிவகங்கை மன்னர் அரண்மனை (முன்புறத் தோற்றம்)
 சிவகங்கை மன்னர் அரண்மனை நுழைவாயில்.
 அரண்மனையில் உள்ள காவலர் பணிமாடம் (போலும்)
அரண்மனை முன்புறத் தோற்றம் உட்பகுதி.
 அரண்மனையின் உட்பகுதி.
அரண்மனையின் உள்ளே உள்ள கோயில்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...