செவ்வாய், 7 ஜனவரி, 2020

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 52) - புலி

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 52) - புலி


புலி

  மலையைச் சார்ந்த இடங்களிலே புலி வாழும். இது யானையைத் தாக்குதலும் யானையால் தாக்கப்பட்டு வலி சோர்தலும் உண்டு. யானை, செந்நாய், மரையினம்முதலியவற்றைக் கொன்று உண்ணும். இதன் உடலில் வளைந்தகோடுகள் இருக்கும். கண்கள் செந்நிறம் உடையன. இதன்உடலுக்கு வேங்கை மரத்தின் பூத்த கிளையும், முழக்கத்திற்குக்கடல் ஒலியும் ஒப்புக் கூறப்படுகின்றன. இருந்தபடியே இருபக்கத்திலும் பார்க்கும் இயல்பினது இது. தான் கொன்றவிலங்குகளை மலைக் குகையிலே இட்டு வைத்திருக்கும். இரவிலேபிற விலங்குகளை வேட்டையாடி உண்ணும். இதன் ஆணைஏற்றையென்றல் மரபு.


(தொடரும்)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...