குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 54) - மான்
மான்
மான் பெரும்பாலும் முல்லை நிலத்திற்குரியதாகச் சொல்லப்படும். இதன் ஆண் கலை இரலை எனவும், பெண் பிணைஎனவும், குட்டி மறி எனவும் வழங்கப்படும். புள்ளியை உடையமானைப் 1புகரி என்பர். ஆண் மானின் கொம்புகள் நெறிந்தும்திரிந்தும் கவைத்தும் இருக்கும். இது மழையற்ற காலத்தில்வெம்மையினால் வருந்தும். மழை பெய்த புனத்தில் அறுகு முதலியவற்றை உண்டு பரல் நீரைக் குடித்துக் கலையும் பிணையும் மகிழ்ந்து துள்ளி விளையாடும். மான் மாலைக்காலத்தில் துணையோடு புதரில் மறையும். உழுந்து, வரகு, அறுகு, மரல், பயறு முதலியவற்றை உண்ணும். வேட்டுவரால் அலைக்கப்படும். ஆண்மானின் உயிர் நிலையில் கானவர் அம்பெய்து கொல்லுவர். மானின் அடியை அடும்பின் இலைக்கு உவமை கூறுவது உண்டு.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக