வியாழன், 9 பிப்ரவரி, 2012

சென்னை, புதுக்கல்லூரிப் பயிலரங்கு 02.02.2012

  சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையுடன்  சென்னை, புதுக்கல்லூரித் தமிழ்த்துறையில் 24.01.2012 முதல் 02.02.2012 வரை பத்துநாட்கள் தொல்காப்பியப் பயிலரங்கு நடைபெற்றது. அன்பான பேச்சும் ஒருங்கிணைக்கும் ஆற்றலும் வாய்ந்த  பேராசிரியர் முனைவர் அகமது மரைக்காயர் இப்பயிலரங்கினை ஒருங்கிணைத்து நடத்தினார். 

     பேராசிரியர் முனைவர் ஜெயதேவன் ஐயா அவர்கள் இப்பயிலரங்கில் தொல்காப்பியமும் பொருண்மையியலும் என்ற பொருளில் உரையாற்றினார். அகராதியியல் துறையில் ஒப்பாரில்லாத ஆழ்ந்த புலமையும் எளிமைப் பண்பும் பிறருக்கு உதவும் பேருள்ளமும் வாய்த்த அவர்கள் உரையாற்றிய அரங்கில் நானும் பேசினேன் என்பதே எனக்குப் பெருமை. என்னுடைய வளர்ச்சிக்குக் காரணியாக இருந்து என்னை ஆற்றுப்படுத்திவரும் பேராசிரியர் முனைவர் இரா. கோதண்டராமன் ஐயா அவர்களுக்கும், பேராசிரியர் முனைவர் ஜெயதேவன் ஐயா அவர்களுக்கும் நன்றி பாராட்டல் என்கடன். பயிலரங்கக் காட்சிகள் இவை:

பேராசிரியர் ஜெயதேவன் ஐயா அவர்களுடன் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அகமது மரைக்காயர்
பேராசிரியர் ஜெயதேவன் ஐயா அவர்களின் உரைப்பொழிவு. பொருள்: தொல்காப்பியமும் பொருண்மையியலும்.
 ஆய்வாளரின் அறிமுக உரை

 பேராசிரியர் ஆ.மணி அவர்களின் உரைப்பொழிவு. பொருள்: தொல்காப்பிய முப்பொருள் கோட்பாடும் திணைக்கோட்பாடும்.
 பேராசிரியர் ஜெயதேவன், பேராசிரியர் கௌது மீரான் உள்ளிட்ட அவையினர்
 நினைவுப்பரிசு வழங்கல் 

 பயிலரங்கப் பயனாளர்கள்
 பயிலரங்கப் பயனாளர்கள்


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...