புதன், 21 மார்ச், 2012

புதுவை உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரி பட்டிமன்ற நிகழ்ச்சி 20.03.2012

    புதுச்சேரியில் கல்வியியல் கல்லூரிகள் பல உள்ளன. அவற்றுள் தனித்தன்மை சான்ற கல்லூரியாகத் திகழ்வது திருக்கனூரில் இயங்கிவரும் உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரி ஆகும். அக்கல்லூரியின் தனித்தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்வது நேற்று (20.03.2012) நடைபெற்ற நிகழ்ச்சியாகும். பொதுவாக ஒருவருடைய மணிவிழா நிகழ்ச்சியை ஒரு மண்டபத்தில் வைத்து உறவினர்களை அழைத்து மகிழ்வதே நாம் அன்றாடம் கண்டுவரும் நிகழ்ச்சியாகும். ஆனால் உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரியின் தாளாளர் திருமிகு இலட்சுமணன் அவர்கள் தன்னுடைய மணிவிழாவை ஒரு இலக்கிய நிகழ்ச்சியாகவும், இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சியாகவும் அமைத்து, கல்லூரியின் இலக்கிய மன்றத்தில் அதனை நடத்திக் காட்டினார். 

     மாணவர்கள் இளம்வயதிலேயே மதுவின் கொடுமையையும், வண்முறையால் விளையும் தீமைகளை அறிந்து விழிப்புணர்வடையும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பது மதுவா?, வன்முறையா? என்ற தலைப்பில் பேச்சுப்போட்டியும், கட்டுரைப்போட்டியும் அவ்விழாவில் நடத்தப்பட்டு,வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. 

   கல்லூரி மாணவர்களுக்கு அதே தலைப்பில் பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, அவர்களும் விழிப்புணர்வுக் கருத்துக்கள் சென்றடையும் வகையில் தம் மணிவிழாவை விழிப்புணர்வு நிகழ்வாகக் கொண்டாடினார். நிகழ்ச்சியின் காட்சிகள் இவை:

 வரவேற்புரையாற்றுகின்றார் தமிழ்த்துறைப் பேராசிரியர் திருஞானசம்பந்தம் அவர்கள்.
 பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்குபெற்ற மாணவி

 மணிவிழா காணும் கல்லூரித் தாளாளர் திருமிகு இலட்சுமணன் ஐயா அவர்களுக்குச் சிறப்புச் செய்தல்
 மணிவிழா காணும் கல்லூரித் தாளாளர் திருமிகு இலட்சுமணன் ஐயா அவர்களுக்குச் சிறப்புச் செய்தல்
மணிவிழா காணும் கல்லூரித் தாளாளர் திருமிகு இலட்சுமணன் ஐயா அவர்களுக்குச் சிறப்புச் செய்தல்  
மணிவிழா காணும் கல்லூரித் தாளாளர் திருமிகு இலட்சுமணன் ஐயா அவர்களுக்குச் சிறப்புச் செய்தல் . 
 உஷா இலட்சுமணன் கல்லூரி மாணவர்கள் பேச்சாளராகப் பங்கேற்ற பட்டிமன்ற நிகழ்ச்சியில் பேசுகின்றார் முனைவர் ஆ.மணி.
 தமது பள்ளிக் கல்வி ஆசிரியருடன் கல்லூரித் தாளாளர் திருமிகு இலட்சுமணன் அவர்கள்.
 பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவற்றில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்குதல்.
பட்டிமன்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவி ஒருவருக்குப் புத்தகப் பரிசு வழங்குகின்றார் கல்லூரியின் செயலர் திருமதி உஷா இலட்சுமணன் அவர்கள். 
பட்டிமன்ற நடுவராகவும், சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்ற முனைவர் ஆ.மணி அவர்களுக்கு ஆடை அணிவிக்கின்றார் கல்லூரித் தாளாளர் அவர்கள்.
உடன் கல்லூரியின் செயலர் திருமதி உஷா இலட்சுமணன் அவர்கள். 

பட்டிமன்ற நடுவராகவும், சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்ற முனைவர் ஆ.மணி அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்குகின்றார் கல்லூரித் தாளாளர் அவர்கள். உடன் கல்லூரியின் செயலர் திருமதி உஷா இலட்சுமணன் அவர்கள்.
 அரங்கப் பார்வையாளர்கள்
 அரங்கப் பார்வையாளர்கள்

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...