செவ்வாய், 27 மார்ச், 2012

தமிழ் இலக்கண, இலக்கிய வரலாறு - 89

திணை இலக்கியம்

76.       குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களில் மிக அதிகமான பாடல்களைப் பாடிய புலவர் யார்?
கபிலர் (28 பாடல்கள்).

77.       குறுந்தொகைப் பாடல்களுக்கு முதன்முதலில் திணை வகுத்து, முதல் உரையும் முதல் பதிப்பும் செய்தவர் யார்?
திருக்கண்ணபுரத்தலத்துச் சௌரிப் பெருமாள் அரங்கன் (1915ஆம் ஆண்டு).

78.       குறுந்தொகைப் பாடல்களின் அடியளவு என்ன?
4 அடிமுதல் 8 அடிவரை. (307,309 ஆகிய இரு பாடல்களும் 9 அடிகளைக் கொண்டுள்ளன).

79.       குறுந்தெகைக்குப் பழங்காலத்தில் உரை எழுதியோர் யார்?
பேராசிரியர் (380 பாடல்கள்), நச்சினார்க்கினியர் (20 பாடல்கள்). இவ்வுரைகள் கிடைக்கவில்லை.

80.      குறுந்தொகைப் பாடல்களுள் யாருடைய கூற்றாக அமைந்த பாடல்கள் மிகுதியானவை?
தலைவி கூற்று (180 பாடல்கள்).

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...