செவ்வாய், 27 மார்ச், 2012

தமிழ் இலக்கண, இலக்கிய வரலாறு - 88

திணை இலக்கியம்

71.  தன் குடும்பம் வறுமைப்பட்டதற்காகத் தந்தையின் பொருளைக் கேளாது ஒருநேர உணவினைக் குறைத்து வாழ்ந்த மானமிகு மங்கையைப் பாடிய நற்றிணைப் புலவர் யார்?
போதனார் (நற். 110).

72.       குறுந்தொகையைத் தொகுத்தவர் யார்?
பூரிக்கோ (சுவடிகளில் தொகை முடித்தான் என்றுள்ளது. எனவே, தொகுத்தவரும் தொகுப்பித்தவரும் பூரிக்கோவே ஆகலாம்).

73.       குறுந்தொகை பாடிய புலவர்களின் தொகை என்ன?
205.

74.   ஆசிரியர் பெயர்அறியப்படாத குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை?
10.

75.       பாடல்தொடரால் பெயர்பெற்ற குறுந்தொகைப் புலவர்களின் எண்ணிக்கை?
18.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...