ஞாயிறு, 16 மார்ச், 2014

புதுச்சேரி, அரவிந்தர் கலை, அறிவியல் கல்லூரிக் கருத்தரங்கு (25.02.2014)

      புதுச்சேரிக்கு அருகில் உள்ள சேதராப்பட்டில் இயங்கி வரும் அரவிந்தர் கலை, அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை பகுதி ஒன்றில் தமிழ் பயிலும் மாணவர்களுக்காகச் சங்க இலக்கியம் பற்றிய உரைவீச்சு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. சென்னை, வைணவக் கல்லூரியில் தமிழ்ப்பணியாற்றி ஓய்வுபெற்ற மதிப்பிற்கும் பேரன்பிற்குமுரிய பேராசிரியர் முனைவர் இலக்குமி நாராயணன் ஐயா அவர்களின் சீரிய வழிகாட்டலில் சிறப்பாக நடைபெற்று வரும் அக்கல்லூரியில் சங்க இலக்கியம் கற்றல் என்னும் பொருளில் உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. அதற்காகக் கல்லூரி முதல்வர்  முனைவர் இலக்குமி நாராயணன் ஐயா அவர்களுக்கும் தமிழ்த்துறைத் தலைவர் சீனிவாசன் அவர்களுக்கும், பேராசிரியர் முனைவர் லோகநாதன் அவர்களுக்கும் நன்றி.  
   முனைவர் இலக்குமி நாராயணன் ஐயா அவர்களின் தமிழன்பும் இளைஞர்களை ஆற்றுப்படுத்தி ஊக்குவிக்கும் பண்புக்கிழமையும் போற்றுதலுக்குரியன. அவர்தம் தலைமையின் கீழ் இயங்கும் கல்விக்கோயிலாக அக்கல்லூரி திகழ்கின்றது என்றால் அது மிகையில்லை. கருத்தரங்கக் காட்சிகள் இவை.

முனைவர் ஆ. மணி அவர்களின் உரை : சங்க இலக்கியம் கற்றல். மேடையில் கல்லூரி முதல்வர் முனைவர் இலக்குமி நாராயணன் அவர்கள்.
கருத்தரங்கச் சுவைஞர்.
கருத்தரங்கச் சுவைஞர்.

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...