திங்கள், 3 மார்ச், 2014

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரிப் பயிலரங்கு (30.01.14)

   புதுக்கோட்டை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரித் தமிழ்த்துறை சார்பில்  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தொள்ளாயிரம் என்னும் பொருண்மையிலான பத்துநாள் பயிலரங்கு 21.01.2014 முதல் 31.01.2014 வரை நடைபெற்றது. தமிழ் இலக்கியங்களில் பரவலான கவனிப்பைப் பெறாத முத்தொள்ளாயிரம் முதன்முறையாக ஆய்வுப்பொருளாகக் கொள்ளப்பட்டது ஆய்வு வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த நிகழ்வு ஆகும். இத்தகு சிறப்புடைய பயிலரங்கினை இந்தியக் குடியரசுத் தலைவரின் இளந்தமிழறிஞர் விருது பெற்ற முனைவர் அ. செல்வராசு அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார். அப்பயிலரங்கில் 31.01.2014 அன்று முனைவர் ஆ.மணி அவர்கள் தொல்காப்பிய அகமரபும் முத்தொள்ளாயிரமும், முத்தொள்ளாயிரப் பதிப்புநெறிகள் ஆகிய இரு தலைப்புக்களிலும், திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் விஜயராணி அவர்கள் முத்தொள்ளாயிரத்தில் கற்பனைகள் என்னும் தலைப்பிலும் உரையாற்றினர். அப்பயிலரங்கின் காட்சிகள் இவை.

அழைப்பிதழ்
அழைப்பிதழ்
மாட்சுமை தங்கிய மன்னர் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி. சேதுராமன் அவர்களின் அறிமுகவுரை.
விழா மேடையில் முனைவர் விஜயராணி, முனைவர் ஆ. மணி, முனைவர் பாலமுருகன் ஆகியோர்.

முனைவர் ஆ. மணி அவர்களின் உரை : தொல்காப்பிய அகமரபும் முத்தொள்ளாயிரமும், முத்தொள்ளாயிரப் பதிப்புநெறிகள்.
முனைவர் அ. செல்வராசு அவர்களின் நன்றியுரை.

 
அரங்கச்  சுவைஞர்

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...