ஞாயிறு, 2 மார்ச், 2014

திருச்சி பெரியார் ஈ.வே.ரா. கல்லூரிக் கருத்தரங்கு (29.02.14)

      திருச்சி, பெரியார் ஈ.வே.ரா. கல்லூரியின் தமிழாய்வுத்துறை சார்பில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் மரபு மற்றும் மொழியியல் நோக்கில் தொல்காப்பியம் என்னும் பெயரிய மூன்று நாள் கருத்தரங்கு 29.01.14 முதல் 31.01.14 வரை நடைபெற்றது. முனைவர் இரா. மோரிஸ் ஜாய் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்திய அக்கருத்தரங்கில் 30.01.14 அன்று பிற்பகலில் திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரி மேனாள் பேராசிரியர் முனைவர் பூரண சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமர்வில் திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரி மேனாள் பேராசிரியர் முனைவர் இந்திரா மனுவேல் அவர்கள் தொல்காப்பிய அகப்பொருள் மரபும் மாற்றமும் : கலித்தொகை வழி என்னும் தலைப்பிலும், புதுச்சேரித் தாகூர் கலைக்கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஆ. மணி அவர்கள் உரையாசியர்கள் பார்வையில் தொல்காப்பிய இடைச்சொல் என்னும் தலைப்பிலும், திருவனந்தபுரம், கேரளப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் அ. ஹெப்ஸி ரோஸ் மேரி அவர்கள் தொல்காப்பியமும் மலையாள இலக்கணங்களும் என்னும் தலைப்பிலும் உரையாற்றினர். அக்கருத்தரங்கின் காட்சிகள் இவை:

அழைப்பிதழ் 
அழைப்பிதழ்  
 அழைப்பிதழ் 
அழைப்பிதழ் 
முனைவர் அ. பிறைமதி அவர்களின் வரவேற்புரை.
முனைவர் க. பூரணச்சந்திரன் அவர்களின் உரை: தொல்காப்பிய பொருள்கோள் முறையியல்.
முனைவர் அ. ஹெப்ஸி ரோஸ் மேரி அவர்களின் உரை : தொல்காப்பியமும் மலையாள இலக்கணங்களும்.
முனைவர் ஆ. மணி அவர்களின் உரை : உரையாசிரியர்கள் பார்வையில் தொல்காப்பிய இடைச்சொல்.
முனைவர் இந்திரா மனுவேல் அவர்களின் உரை: தொல்காப்பிய அகப்பொருள் மரபும் மாற்றமும் கலித்தொகை வழி.

பார்வையாளர் பகுதியில் பெரியார் ஈ.வே.ரா. கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கு.ப. கிருஷ்ணன் அவர்களுடன் முனைவர் ஆ. மணி, முனைவர் அ. ஹெப்ஸி ரோஸ் மேரி, முனைவர் மோரிஸ் ஜாய் ஆகியோர்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...