திங்கள், 24 ஜனவரி, 2011

உவமான சங்கிரகம் - செந்தமிழ்ப் பிரசுரப் பதிப்பு 1914

      மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்டு வரும் செந்தமிழ் இதழ்ப் பதிப்பாக உவமான சங்கிரகம் என்ற நூலின் மூலபாடப் பதிப்பு 1914இலில் வெளிவந்துள்ளது. கடவுள் வாழ்த்தோடு கூடிய 37 நூற்பாக்களைக் கொண்ட நூல் இது. விநாயகர் வணக்கம் கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ளது.

        உவமான சங்கிரகத்தின் ஆசிரியர் பெயர், இடம், காலம் முதலியன விளங்கவில்லை என்றும், திருவேங்கடையர் செய்த உவமான சங்கிரகத்தினும், புகழேந்திப் புலவர் செய்த இரத்தினச் சுருக்கத்தினும் அதிகமான உவமைகள் இதில் கூறப்பட்டுள்ளன என்றும், மதுரைத் தமிழ்ச்சங்கத்து ஏட்டுப்பிரதியில் இந்நூல் உள்ளது என்றும் செந்தமிழ் இதழாசிரியர் நாராயணையங்கார் குறிப்பிட்டுள்ளார். இந்நூல் தமிழ்ச்சங்கத்தில் சைவநூற் பரிசோதகராக இருந்த சே.ரா. சுப்பிரமணியக் கவிராயரால் பரிசோதிக்கப்பட்டு, மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலையிற் பதிப்பிக்கப் பட்டுள்ளது. அதன் தலைப்புப் பக்கம் இது.


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...