புதன், 12 ஜனவரி, 2011

சிதம்பரப் பாட்டியல் - செந்தமிழ்ப் பிரசுரப் பதிப்பு 1932

         பாட்டியல் என்பது தொடர்நிலைச் செய்யுள் இலக்கணம் கூறும் நூல் ஆகும். தனிநிலைச்செய்யுள் இலக்கணம் கூறும் நூல் செய்யுளியல் என்று அழைக்கப்படும். செய்யுளியலுக்குச் சான்று யாப்பருங்கலம், காரிகை போல்வன. பாட்டியலுக்குச் சான்று பன்னிருபாட்டியல் போல்வன. சிதம்பரப் பாட்டியல் தனிநிலை, தொடர்நிலைச் செய்யுள் இலக்கணம் கூறும் நூல் என்பர்.

     சிதம்பரப் பாட்டியலின் ஆசிரியர் பரஞ்சோதியார் ஆவர். இவர் சிதம்பர புராணம்,  மதுரையுலா ஆகியவற்றை இயற்றியவர்.  இவர் காலம் கி.பி.16 ஆம் நூற்றாண்டு. (சிதம்பரபுராணம் இயற்றப்பட்ட காலம் கி.பி.1518 என்பர்).

        சிதம்பரப் பாட்டியலுக்குப் பழையவுரை ஒன்றுண்டு. அதன் ஆசிரியர் பெயர், காலம் முதலியன தெரியவில்லை. இவ்வுரையின் பின்பகுதி கிடைக்க வில்லை.  சிதம்பரப் பாட்டியலின் மூலம்,உரை ஆகியன 1911இல் மு.இராகவை யங்காரால் முதன்முறையாகப் பதிப்பிக்கப்பட்டன. அதன் இரண்டாம் பதிப்பு கி. இராமானுசையங்காரால் 1932 இல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் தலைப்புப் பக்கம் இது.


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...