புதன், 5 ஜனவரி, 2011

புறநானூறு - ஔவை துரைசாமிப் பிள்ளை விளக்கவுரைப் பதிப்பு இரண்டாம் பகுதி ( 1972)

          புறநானூற்றின் பழையவுரை முதல் 269 பாடல்களுக்கு மட்டும் கிடைத்துள்ளது. எஞ்சிய பாடல்களுக்கும் ஔவை. துரைசாமிப்பிள்ளை அவர்களைக் கொண்டு உரையெழுதிச் சேர்த்து நூல்முழுமைக்குமான முதல் உரையைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது. இரு பகுதிகளாக வந்த அப்பதிப்பின் முதல்பகுதி 1947- லில் வெளிவந்தது. இரண்டாம் பகுதி 1951 செப்டம்பரில் முதற்பதிப்புக் கண்டது. இரண்டாம்பகுதியின் மறுபதிப்புக்கள் 1956 மார்ச்சு, 1962 செப்டம்பர், 1968 திசம்பர், 1972 ஆகத்து ஆகிய ஆண்டுகளில் வெளிவந்தன. 

          உ.வே.சாமிநாதையருக்குக் கிடைக்காத இராசாளியார் என்பவரின் சுவடி பார்த்துப் படிசெய்யப்பட்ட கையெழுத்துப் படி கொண்டு பல திருத்தங்களை இப்பதிப்பு பெற்றுள்ளது என்பது ஔவை. துரைசாமிப்பிள்ளையின் முன்னுரை தரும் செய்தியாகும். முதற்பகுதியைப் போன்றே அமைந்துள்ள இதன் 1972 ஆண்டுப் பதிப்பின் தலைப்புப் பக்கம் இது.

   

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...