வியாழன், 6 ஜனவரி, 2011

பேராசிரியர் க. இராமசாமி அவர்களின் பாராட்டுரை

   செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் பேராசிரியர் க.இராமசாமி அய்யா அவர்களுக்கு என்னுடைய நூல்களை அனுப்பியிருந்தேன். பொதுவாக உயர்பதவிகளில் இருப்போர் இவ்வாறு வரும் நூல்களைப் பார்ப்பதோடு சரி.பதில் அனுப்புவதில்லை என நண்பர்கள் கூறியதைக் கேட்டிருக்கின்றேன். ஆனால் பேராசிரியர் அவர்கள் அப்படியில்லை என்பதற்குச் சான்றாக நான் நூல்கள் அனுப்பி இரு வாரங்களுக்குள்ளாகவே அவர்களிடமிருந்து மடல் வந்தது. அய்யா அவர்களை எங்கள் கல்லூரியில் நடைபெற்ற பயிலரங்கின் நிறைவுவிழாவில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதுவே நான் அவர்களை நேரில் பார்க்கும் முதல்முறை. (இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனத்தில் அவர்கள் பணியாற்றும் காலத்திலேயே நான் அவர்களைப் பற்றி அறிந்திருந்தாலும் நேரில் காணும் வாய்ப்பினைப் பெறவில்லை).

     முதன்முறைக் காணும்போதே பன்னாள் பழகிய அன்போடு அவர்கள் பேசியது என்னை அவர்பால் ஈர்த்தது. அவ்ருடைய எளிமையும் அன்பான அணுகுமுறைகளும் அறிவாளுமையும் நாம் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியன. எனவே, அவருடைய வழிகாட்டுதலைப் பெறும் எண்ணத்தோடு அவர்களுக்கு என் நூல்களை அனுப்பியிருந்தேன். இளைஞர்களை ஆற்றுப்படுத்துவதிலும் ஊக்கப்படுத்துவதிலும் சிறப்புடைய பேராசிரியராகிய அவர் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய மடலின் படி இதோ!!!

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...