சனி, 29 ஜனவரி, 2011

சென்னைப் பல்கலைக் கழகப் பயிலரங்கு 22.01.11

        சென்னைப் பல்கலைக் கழகத் திருக்குறள் துறையில் திருக்குறளும் உரைகளும் - ஆய்வுக்களங்கள் - பன்முகநோக்கு என்னும் பொருண்மையில் 18.01.11 முதல் 27.1.11 வரை பயிலரங்கு ஒன்று நடைபெற்றுவருகின்றது.  பேராசிரியர் முனைவர் ய. மணிகண்டன் அவர்களால் ஒருங்கிணைத்து நடத்தப் பட்ட இப்பயிலரங்கில் பங்கேற்று உரைவழங்கும் வாய்ப்புக் கிடைத்தது. இலக்கண இலக்கிய உரைகளில் திருக்குறள் என்பது என் உரைத்தலைப்பு.

       தமிழுலகால் அறியப்படாமல் தனியே இருந்து ஆய்வுரைகளும் நூல்களும் எழுதிக்கொண்டிருந்த என்னை, நீங்கள் தமிழுலகிற்கு அறிமுகமாக வேண்டியவர் எனக்கூறி ஆற்றுப்படுத்திய செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆய்வறிஞர் முனைவர் இரா.கோதண்டராமன் ஐயா அவர்களே இந்த வாய்ப்புக்கும் முழுமுதற் காரணமானவர்கள்.  முனைவர் ய. மணிகண்டன் ஐயா அவர்களும் என்னை நேரில் பாராதபோதும் தம்தகைமையால் என்மீது அன்புகாட்டினார்கள்.

     முனைவர் செ.வை. சண்முகம் ஐயா அவர்களும், முனைவர் தெ. ஞானசுந்தரம் ஐயா அவர்களும் என்னைப் பாராட்டியுரைத்த பெருமக்களாவர். இப்பெருமக்களுக்கு நான் எஞ்ஞான்றும் நன்றியுடையேன்.  

பயிரங்க உரைக் காட்சி
 பயிரங்க உரை அண்மைக்காட்சி  
      

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...