சனி, 15 ஜனவரி, 2011

சென்னைப் புத்தகக் கண்காட்சி 2011

    சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குச் செல்லவேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்ற இப்போதுதான் வாய்ப்பு வந்தது. அந்த வாய்ப்பினை வழங்கியவர் பேராசிரியர் முனைவர் வேங்கட சுப்பராய நாயகர் அவர்கள். கல்லூரிப் பணிநாளாகிய நேற்று (14.01.11) வரையறுத்த விடுப்பு எடுத்துக்கொண்டு செல்லலாம் என்று முடிவு செய்தோம். விடுப்பும் கல்விப்பணிகளுக்குப் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தினர் பேராசிரியர் அவர்கள். எனவே இந்த ஏற்பாடு. உடன் நண்பர்கள் தமிழுணர்வாளர்கள் திரு. சீனு. தமிழ்மணி அவர்களும்,  திரு. பக்தவச்சலம் அவர்களும் இணைந்துகொள்ள எங்கள் தமிழ்ப்பயணம் / நூல் தேடும் பயணம் தொடங்கியது.

           காலை 6.00 மணிக்குப் பயணம் மகிழ்வுந்தில் தொடங்கியது. வழில் காலையுணவு பேராசிரியரின் ஏற்பாடு. ஏற்பாடும் சாப்பாடும் (உணவு) நன்று. முதலில் அறிஞர் அண்ண நூற்றாண்டு நூலகம் செல்வது எங்கள் திட்டம். அதன்படி அங்குச் சென்றோம்.

         அண்ணா நூற்றாண்டு நூலகம்  சென்னை கோட்டூர்புரத்தில் உலகத் தரத்தில் அமைக்கப் பட்டுள்ள நூலகம் 2010 ம் வருடம் அண்ணாவின் பிறந்த தினமான செப்டம்பர் 15ல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவிடப்பட்டது. நவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நூலகம் தெற்கு ஆசியாவிலேயே மிக பெரிய நூலகம் ஆகும். ஒன்பது தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த நூலகத்தில் ஒவ்வொரு தளமும் ஒவ்வொரு பிரிவிற்கென ஒதுக்கப்பட்டுள்ளது. 8 ஏக்கர் பரப்பளவில் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நூலகம் தரைதளத்துடன் 8 தளங்கள் கொண்ட கட்டடமாக அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் சிறுவர்-சிறுமிகளுக்கான புத்தகங்கள், இயற்கை எழில் கொண்ட வாசிப்பு அறை உள்ளது. 2-வது தளத்தில் தமிழ் நூல்களும், 3-வது தளத்தில் ஆங்கிலநூல்களும், 4-வது தளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட பல்வேறு மொழி நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. 5-வது தளத்தில் பத்திரிகைகளின் பழைய பதிப்புகள், 6-வது தளத்தில் அரசு ஆவணங்கள், 7-வது தளத்தில் நன்கொடையாளர்கள் கொடுத்த நூல்கள் மற்றும் ஆடியோ-வீடியோ தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன. எண்முறை நூலகமும், புகைப்படத் தொகுப்புகளும் 8-வது மாடியில் இருக்கின்றன.


     பார்வை இல்லாதவர்கள் பிரெய்லி முறையில் படிக்கும் நூலக அரங்கும் இருக்கிறது. 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கு, 30 பேர் அமரும் சிறு அரங்குகள் ஆகியனவும் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நூலகத்துக்கு பசுமைக் கட்டிடச் சான்றும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் நூல்கள் தவிர மின்னூல்கள், நாளிதழ்கள், பல்வேறு மொழிகளில் வார இதழ்கள், ஆராய்ச்சிக்குத் தேவையான கட்டுரைகள், புகைப்படங்கள், ஓலைச்சுவடிகள் போன்ற பல்வேறு வகையான ஆவணங்கள் படிக்கக் கிடைக்கும் என்பர். இன்னும் அங்குக் கட்டடப்பணிகள் நடந்துவருகின்றன. மிகச்சிறந்த நூலகமாக இது வருங்காலத் தலைமுறைக்கு அமையும். இதற்காக நாம் தமிழக முதல்வரைப் பாராட்டலாம்.

          நிழற்படங்கள் எடுக்கவேண்டும் என்ற எண்ணம் ஏனோ நிறைவேற வில்லை. அதன்பின்னர்ச் செம்மொழிப்பூங்கா சென்றோம். இன்னும் முற்றும் பணிகள் முடியாத அப்பூங்காவில் பல்வகையான பயிர்வகைகளைக் கண்டு மகிழ்ந்தோம். பனையின் பலவகைகளை அங்குக் காணமுடிந்தது.

                    மதியவுணவுக்குப் பின்னர்ப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றோம். 300 க்கும் மேற்பட்ட புத்தக நடுவங்கள். கண்ணையும் கருத்தையும் கவரும் நூற்குழந்தைகள்.  ஒவ்வொரு அரங்காகச் சென்று கண்டு நூல்களை வாங்கி மகிழ்ந்தோம்.  நூலகளைச் சுமந்துகொண்டு நடக்க இயலாமல் போனதால் இன்னும் சில அரங்குகளைப் பார்க்க வாய்ப்பில்லாமல் செய்துவிட்டது. ஒவ்வொரு பாதைக்கும் தமிழறிஞர்களின் பெயர்சூட்டியிருந்தது மனத்தை நெகிழச்செய்தது. 

            ஒவ்வொரு பாதையின் முடிவிலும் ஒரு நடுவத்தை அமைத்து அதில் நூல்களைச் சுமக்க இயலாமல் வருகின்றவர்களிடம் பெற்றுப் பாதுகாத்து முடித்துச் செல்லும்போது வழங்கினால் புத்தகம் வாங்கும் அனுபவம் இனிமையாகும் என்று தோன்றும் என்று நண்பர் நாயகர் அவர்கள் கூறியது எனக்கும் சரியேன்றே படுகின்றது. 

 செம்மொழிப் பூங்கா நுழைவாயிலில் திரு. பக்தவச்சலம், நான், பேராசிரியர் நாயகர், திரு. சீனு. தமிழ்மணி ஆகியோர்.
 பனைவகை
  பனைவகை
  பனைவகை
  பனைவகை
  பனைவகை
புத்தகக் கண்காட்சி நுழைவாயிலில்.
பேராசிரியர் நாயகர் அவர்கள் நூல்களைப் பார்வையிடல்
         நான் நூல்களைத் தேடியபோது.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...