செவ்வாய், 18 ஜனவரி, 2011

பன்னிரு பாட்டியல் மூலப்பதிப்பு 1951

        பாட்டியல் என்பது செய்யுள் இலக்கணத்தினுள் ஒரு பிரிவாகும்.  பன்னிரு பாட்டியல் என்பது இங்கு ஆகுபெயராய் நின்று பன்னிருவரால் இயற்றப்பட்ட பாட்டிலக்கணநூல் பன்னிரண்டினை உணர்த்துவதுடன், பிற்காலத்தாரொருவரால் தொகுக்கப்பட்ட நூல் என்பதையும் உணர்த்தும் என்பர்.

     பன்னிருபாட்டியல் 360 நூற்பாக்களைக் கொண்டது. அவற்றுள் 359 நூற்பாக்கள். 204 ஆம் நூற்பா ஒன்று மட்டும் நேரிசைவெண்பா என்பர். இந்நூல் எழுத்தியல், சொல்லியல், இனவியல் என்ற மூன்று இயல்களைக் கொண்டது.  இது ரா.இராகவையங்காரால் 1904 ஆம் ஆண்டில் முதன்முறையாகப் பதிப்பிக்கப்பட்டது. அதன் இரண்டாம் பதிப்பு 1951இல் கூடுதலாகப் பாடவேறுபாட்டுக் குறிப்புக்களுடன் கி.இராமானுசையங்காரால் மதுரைத் தமிழ்ச்சங்கப் பதிப்பாக வெளியிடப்பட்டன.  அப்பதிப்பு அச்சிடும் காலத்தில் அதனைக் கண்ட வையாபுரிப்பிள்ளை தம்மிடம் இருந்த படிகளோடு ஒப்புநோக்கிக் கூடுதலாகப் பாடவேறுபாடுகள் பலவற்றைக் குறித்துக் கொடுத்தார். அவை அடுத்த பதிப்பில் சேர்த்துக் கொள்ளப்படும் என்று இரண்டாம் பதிப்பின் பதிப்பாசிரியர் கூறியுள்ளார்.

        1951 இல் வெளிவந்த இரண்டாம் பதிப்பின் தலைப்புப் பக்கம் இது.


1 கருத்து:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

தங்கள் வலைப்பக்கத்துக்கு வந்ததில் பெருமகிழ்ச்சியடைகிறேன்..

தொடர்க தங்களின் தமிழ்ப்பணி..

தாங்கள் எங்கு பணியாற்றி வருகிறீர்கள்?

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...