பன்னிருபாட்டியல் 360 நூற்பாக்களைக் கொண்டது. அவற்றுள் 359 நூற்பாக்கள். 204 ஆம் நூற்பா ஒன்று மட்டும் நேரிசைவெண்பா என்பர். இந்நூல் எழுத்தியல், சொல்லியல், இனவியல் என்ற மூன்று இயல்களைக் கொண்டது. இது ரா.இராகவையங்காரால் 1904 ஆம் ஆண்டில் முதன்முறையாகப் பதிப்பிக்கப்பட்டது. அதன் இரண்டாம் பதிப்பு 1951இல் கூடுதலாகப் பாடவேறுபாட்டுக் குறிப்புக்களுடன் கி.இராமானுசையங்காரால் மதுரைத் தமிழ்ச்சங்கப் பதிப்பாக வெளியிடப்பட்டன. அப்பதிப்பு அச்சிடும் காலத்தில் அதனைக் கண்ட வையாபுரிப்பிள்ளை தம்மிடம் இருந்த படிகளோடு ஒப்புநோக்கிக் கூடுதலாகப் பாடவேறுபாடுகள் பலவற்றைக் குறித்துக் கொடுத்தார். அவை அடுத்த பதிப்பில் சேர்த்துக் கொள்ளப்படும் என்று இரண்டாம் பதிப்பின் பதிப்பாசிரியர் கூறியுள்ளார்.
1951 இல் வெளிவந்த இரண்டாம் பதிப்பின் தலைப்புப் பக்கம் இது.
1 கருத்து:
தங்கள் வலைப்பக்கத்துக்கு வந்ததில் பெருமகிழ்ச்சியடைகிறேன்..
தொடர்க தங்களின் தமிழ்ப்பணி..
தாங்கள் எங்கு பணியாற்றி வருகிறீர்கள்?
கருத்துரையிடுக